திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும். பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்
மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோகினி) என்பது இந்து கடவுளான திருமால் எடுத்த பெண் அவதாரமாகும். காண்போரை தன்னுடைய மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடைய இந்த அவதாரம், மோகினி அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.
மோகினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு சாஸ்தா என்ற குழந்தையை தோற்றுவித்தாகவும், பாரதபோரில் களபலி தருவதற்காக தேர்ந்தெடுக்கப்பெற்ற அரவானின் திருமண ஆசையை நிறைவேற்றியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன.
உச்சைச்சிரவம் எனும் ஏழுதலைகளையும், பறக்கும் திறனும் கொண்ட வெள்ளைக் குதிரையானது பாற்கடல் கடையும் பொழுது தோன்றியதாகும்.
அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்ற இவர்கள் ஐவரும் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த இல்லறவழிகாட்டிகளாக முன்னிருத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பஞ்சகன்னிகைகள் என்று பெயர்
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமான தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம் எனப்படுகிறது.