உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சமண வலைவாசல்
.

அறிமுகம்

சமணக் கொடி
சமணக் கொடி

சமணம் எனத் தமிழகத்தில் பரவலாக அறியப்படும் சைனமதம் ஒரு பண்டைய இந்திய மதமாகும். அகிம்சை (உயிர்க்குறுகண் செய்யாமை), அநேகாந்தவாதம் (பல்முனைக் கொள்கை) மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) ஆகிய மூன்றும் சமணத்தின் முக்கிய தூண்களாகும். துறவு என்பது இம்மதத்தின் முக்கிய கொள்கையாகும்.

சமணர்கள் ஐந்து முக்கிய உறுதிமொழிகளை எடுக்கின்றனர். அவையாவன: அகிம்சை (உயிர்க்குறுகண் செய்யாமை), சத்தியம் (உண்மை), அசுதேயம் (கள்ளாமை), பிரம்மச்சரியம் (பாலியல் இச்சை அடக்கல்) மற்றும் அபரிக்கிரகம் (பற்றின்மை) என்பனவாகும். இக் கொள்கைகள் சமணப் பண்பாட்டைச் செதுக்குவதில் பெரும்பங்காற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, சமணர்கள் பெரும்பாலும் மரக்கறியுணவு உண்போராக உள்ளனர். பரசுபரோபகாரோ சீவானாம் (ஒருவருக்கொருவர் உதவி புரிவதே உயிர்களின் கடமை) என்பது இச் சமயத்தின் குறிக்கோளாகும். இச் சமயத்தின் மிகப்பொதுவான மற்றும் அடிப்படையான வழிபாடு நமோகார மந்திரமாகும்.

சமணத்தின் அகநிலை சார்ந்த எண்ணங்களும் அதன் வரலாறும், தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்படும், வழி வழியாக வந்த இருபத்து நான்கு தலைவர்களை அடியொற்றி உருவானதாகும். தற்போதைய காலச் சுழற்சியின் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் ஆவார். சமண நம்பிக்கைகளின் படி, இவர் மில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆவார். வரலாற்றாய்வாளர்களின் கூற்றுப்படி, இவர் பொ.ஊ.மு. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் பொ.ஊ.மு. 600 அளவில் வாழ்ந்துள்ளார். சமண மதம் என்றுமுள்ள மதமாகக் கருதப்படுகிறது. அண்டத்தின் ஒவ்வொரு காலச் சுழற்சியின்போதும் தீர்த்தங்கரர்கள் வந்து உலகை வழிப்படுத்துவர்.

சமணம், தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உலகின் பழைமையான மதங்களில் ஒன்றாகும். திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்போர் இம் மதத்தின் இரு முக்கிய பிரிவினராகும். துறவு வழிமுறைகள், பால்நிலை மற்றும் புனித நூல்கள் போன்றவை பற்றி இரு பிரிவுகளும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. இவ்விரு பிரிவுகளிலும் துறவிகள் உள்ளனர். துறவிகள், இல்லறத்தோரால் (சிராவகன் மற்றும் சிராவிகை) பேணப்படுகின்றனர். சுவேதாம்பரப் பிரிவில் மேலும் மூன்று துணைப்பிரிவுகள் உண்டு. அவையாவன: மந்திர்வாசி, தேராபந்தி மற்றும் இசுத்தானகவாசி என்பனவாகும். இம் மதத்தைப் பின்பற்றுவோர் சமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மக்கள் தொகை நான்கிலிருந்து ஐந்து மில்லியன் வரை உள்ளதோடு, இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு வெளியில், கனடா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்களவு சமணர்கள் வாழ்கின்றனர். சப்பானில் இம்மதத்துக்கு மாறுவோர் தொகை உயர்ந்து வருகிறது. பர்யுசனா மற்றும் தாசு லட்சணா, அட்டனிகா, மகாவீர் சென்ம கல்யாணக், அட்சய திருதியை மற்றும் தீபாவளி என்பன சமணர்களின் முக்கிய விழாக்களாகும்.


சமணம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

சமண அறிஞர்கள்

தூலபத்திரர் (பொ.ஊ.மு. 297-198) என்பவர் சமணத்தின் சுவேதாம்பரப் பிரிவை நிறுவியவராவார். பொ.ஊ.மு. நான்காம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசில் நிலவிய 12-ஆண்டு நீண்ட பஞ்சத்தின் போது இப்பிரிவு நிறுவப்பட்டது. இவர் பத்திரபாகு மற்றும் சம்பூதவிசயர் ஆகியோரின் சீடராவார். இவரது தந்தையான சகடால என்பவர், சந்திர குப்த மௌரியரின் வருகைக்கு முன்னரான நந்தப் பேரரசில் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர் அரசின் முதன்மை அமைச்சராக ஆகிய வேளையில், தூலபத்திரர் சமணத் துறவியானார். ஏமச்சந்திரரால் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமண நூலில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

தூலபத்திரர், தன நந்தனின் அமைச்சரான சகடாலவின் மகனும், சிறீகயனின் உடன்பிறப்புமாவார். மரபு முறைப்படி இவரது காலம் பொ.ஊ.மு. 297 இலிருந்து 198 வரையாகும். தன நந்தனின் அரசவை நாட்டியக்காரியான ரூபகோசாவைக் காதலித்து அவளோடு வாழ்ந்து வந்தார். தனது தந்தையின் இறப்புக்குப் பின் அமைச்சுப் பொறுப்பை மறுதலித்து சமணத் துறவியானார். இவரது சகோதரர், பிற்காலத்தில் நந்தப் பேரரசின் முதன்மை அமைச்சரானார். இவர் சம்பூதவிசயர் (பொ.ஊ.மு. 347-257) மற்றும் பத்திரபாகு (பொ.ஊ.மு. 322-243) ஆகியோரின் சீடரானார். இவர் 12 ஆண்டுகள் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவர் தனது சாதுர்மாச காலப்பகுதியை ரூபகோசாவின் வீட்டில் கழித்தார். இக்காலப்பகுதியில் ரூபகோசா இவரைத் தமது துறவு வாழ்வினின்றும் வழுவச்செய்து தன்வசப்படுத்த முயன்று தோற்றுப்போனாள். அதற்கு மாறாக, தூலபத்திரர் அவளை சிராவிகையாக (சமண இல்லறப் பெண்) உறுதிமொழி ஏற்கச்செய்தார்.


சிறப்புப் படம்

வலைவாசல்:சமணம்/சிறப்புப் படம்/0

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

தொடர்பானவை

தொகு  

சமணம் பற்றி சான்றோர் கூறியமை


வலைவாசல்:சமணம்/சான்றோர் கூற்று/7

தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
சமணம்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


சமயம்சமயம்
சமயம்
பௌத்தம்பௌத்தம்
பௌத்தம்
இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
இந்தியாஇந்தியா
இந்தியா
சமயம் பௌத்தம் இந்து சமயம் இந்தியா
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சமணம்&oldid=3267091" இலிருந்து மீள்விக்கப்பட்டது