ஜங்காரத்வனி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜங்காரத்வனி கருநாடக இசையின் 19வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 19வது இராகத்திற்கு ஜங்காரபிரமரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF.svg/250px-%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF.svg.png)
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம1 க2 ரி2 ஸ |
- இது வேத என்றழைக்கப்படும் 4வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சியாமளாங்கி (55) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம, தைவத சுரம் முறையே ரத்னாங்கி (02), கமனச்ரம (53) மேளங்கள் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்[தொகு]
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | பணிபதிசாயீ மாம்பாது | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |