உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம்
Malaysian National Security Council
Majlis Keselamatan Negara Malaysia
مجليس کسلامتن نݢارا مليسيا

NSC / MKN
MAGERAN
துறை மேலோட்டம்
அமைப்பு7 சூலை 1971; 53 ஆண்டுகள் முன்னர் (1971-07-07)
முன்னிருந்த அமைப்பு
  • தேசிய செயல்பாட்டு மன்றம்
    National Operations Council
    Majlis Gerakan Negara (1969–1971)
வகைஅரசு
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்பெர்டானா புத்ரா
புத்ராஜெயா  மலேசியா
குறிக்கோள்உத்தி, பாதுகாப்பு, இறையாண்மை
Strategy, Security, Sovereignty
Strategik, Keselamatan, Kedaulatan
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • நுசிர்வான் சைனல் அபிடின்
    Nushirwan bin Zainal Abidin, தலைமை இயக்குநர்
வலைத்தளம்www.mkn.gov.my

மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம் (மலாய்: Majlis Keselamatan Negara Malaysia (MKN); ஆங்கிலம்: Malaysian National Security Council (NSC); ஜாவி: مجليس کسلامتن نݢارا مليسيا‎) என்பது மலேசியப் பிரதமர் துறையின் கீழ் உள்ள மலேசிய அரசின் பாதுகாப்பு மன்றம்; மற்றும் மலேசியாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகிக்கும் அரசு முகமையாகும்

இந்த அமைப்பு அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும்; பொது ஒழுங்கு, பாதுகாப்பு, அரசு முதன்மைச் சேவைகளைக் கணிகாணிக்கிறது. நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப தன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது; மற்றும் நாட்டின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் கட்டளைகளையும் சீர்செய்கிறது.

அமைப்பு

[தொகு]

இந்த மன்றம் மலேசியப் பிரதமரின் தலைமையில் செயல்படுகிறது.

நிர்வாக உறுப்பினர்கள்

[தொகு]

வரலாறு

[தொகு]

13 மே இனக்கலவரம்; மலேசியா போன்ற பல்லின சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், உணர்திறன்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு தரப்புகளுக்கு இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து, தேசிய செயல்பாட்டு மன்றம் (மலாய்: Majlis Gerakan Negara (MAGERAN); ஆங்கிலம்: National Operations Council (NSC) நிறுவப்பட்டது.

அப்போதைய நிலையில் நாட்டிற்கான பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது மக்களிடையே அமைதியைப் பாதுகாத்தல், நாட்டிற்குத் தேவையான முக்கியப் பொருட்களை வழங்குதல்; மற்றும் நடைமுறைல் இருக்கும் சேவைகளை மேம்படுத்துதல் போன்றவை தேசிய செயல்பாட்டு மன்றத்தின் முக்கிய இலக்காக இருந்தன.

கம்யூனிச அச்சுறுத்தல்கள்

[தொகு]

நாட்டின் நிலைமை மேம்பட்டதும், 1971-ஆம் ஆண்டு தேசிய செயல்பாட்டு மன்றம் கலைக்கப்பட்டது.[1] தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பாதுகாப்புத் தன்மையை நிர்வகிப்பதற்குப் பொறுப்பான ஒரு நிறுவனம் தேவை என்று அரசாங்கம் உணர்ந்தது.

அத்துடன் அந்த வேளையில், கம்யூனிச அச்சுறுத்தல்களும் இருந்தன; மற்றும் இனங்களுக்கு இடையிலான உறவுத் தனமைகளும் சற்றே பலகீனமாக இருந்தன. இவற்றின் காரணமாக பிப்ரவரி 23, 1971 அன்று, மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தை அரசாங்கம் நிறுவியது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sejarah". 2019-04-23. Archived from the original on 23 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.

வெளி இணைப்புகள்

[தொகு]