பாகவதம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
![]() |
பாகவத புராணம் என்பது பதினெண் புராணங்களில் ஐந்தாவது புராணமாகும். இது கடவுள் என வைணவர்கள் போற்றும் விஷ்ணுவின் கிருட்டிணன் அவதாரம் பற்றிக் கூறுவது. இதனை வடமொழி நூல்களில் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல் பாங்கினை மட்டுமே தமிழ் நூல்களில் பின்பற்றியுள்ளது.
வடமொழியிலுள்ள பாகவத புராண நூல்வகைகள்
[தொகு]இவற்றுள் இதிகாசம், புராணம் என்னும் இரண்டு வகையான நூல்கள் மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன.[1]
பாகவதம்
[தொகு]வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார். அவை பொருள் நோக்கில் பகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகிறது.
தொடக்கம்
[தொகு]- கஜேந்திரமோட்சம், வராக அவதாரம், கபில முனி, நரசிம்ம அவதாரம், துருவன், மச்ச அவதாரம், கூர்ம அவதாரம்,[2]
- உலகங்கள், தீவுகள் உண்டான வரலாறு,[3]
- பிருதுச் சக்கரவர்த்தி, ரிசபராசன், வாமன அவதாரம், அஜாமிளன், ருக்மாங்கதன், அம்பரீசன், பரசுராம அவதாரம், இராம அவதாரம்,[4]
- விதர்ப்ப நாட்டு அரசியான ருக்மணியை சூரசேன நாட்டு அரசனான கிருஷ்ணர் கடத்தி சென்று துவரகையில் திருமணம் செய்தல்,[5]
- அக்ரூரர் மற்றும் சியாமந்தக மணியின் வரலாறு.[6]
கண்ணனின் பிள்ளைமை
[தொகு]- கண்ணன் பிறக்கிறான். அவன் படத்தை ருக்மணி காண்கிறாள். (நாரதரின் கூற்று),[7]
- கம்சனின் தங்கையான தேவகிக்கு வசுதேவருடன் திருமணம். அவர்களின் முதல் ஆறு குழந்தைகளை காம்சனால் கொல்லப்படல். எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதையிடமும், யசோதை பெற்ற பெண் குழந்தையான யோகமாய தேவகியிடமும் வசுதேவரால் இடம் மாறல். யோகமாய என்ற பெண் குழந்தையைக் கம்சன் கொல்லும் போது அக்குழந்தை பறத்தல். கம்சனைக் கொல்லக் கண்ணன் வளர்கிறான் அந்த பெண் குழந்தையான எனல்,[8]
- கண்ணன் வெண்ணெய் திருடுதல், அவன் வாயில் யசோதை இந்த உலகத்தை காணுதல்,[9]
- ததிபாண்டனின் முக்தி,[10]
- கண்ணன் தானே ஆயிரம் சிறுவனாயும், கன்றுகளாயும் இருந்து பிரம்மனுக்கு தன் மாயை காட்டுதல்,[11]
- கோபியர்களின் ஆடைகளை கண்ணன் கவர்தல் மற்றும் வழங்குதல்.[12]
கண்ணனின் மனைவியர்
[தொகு]- கும்பகனின் பெணான நப்பின்னையை மணக்க ஏழு காளைகளை கண்ணன் அடக்கி அவளை மணத்தல்,[13]
- ககுத்மியின் மகளான ரேவதியை பலராமன் மணத்தல்,[14]
- கண்ணனின் குணாதிசயங்களை நாரதர் சொல்லக் கேட்டு ருக்மணி உருகல்,[15]
- விதர்ப்பராசன் தன் மகள் ருக்மணியை கண்ணனுக்குத் தர எண்ணுகிறான். அவன் மகன் உருக்மி அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க முடிவு செய்து ஓலை அனுப்புகிறான். ருக்மணி கண்ணனுக்கு ஓலை அனுப்புகிறாள் அவளை அவன் மணக்க வேண்டும் என. அவளின் தாயான விதர்ப்பராசி ருக்மணியைக் சுயம்பரதிர்க்கு முன் வணங்கும் பார்வதி கோயிலுக்குக் கூட்டிச் சென்று அங்கு வந்த கண்ணனிடம் ஒப்படைக்கிறாள்,[16]
- உருக்மி ஒரு படையை கொண்டு கண்ணனை தாக்குகிறான் மற்றும் அந்த படையை கண்ணனின் படைகள் கொன்று விடுகின்றனர். பலராமன் உருக்மியின் மார்பில் தாக்கி அவன் தலையை முறிக்கப் போகும் போது ருக்மணி வேண்டுகோளின்படி அவனை மானபங்கப்படுத்தி விட்டுவிட்டுத் துவாரகைக்கு அவர்களுடன் சேர்ந்து மீள்கிறான்,[17]
- ருக்மணி மற்றும் கண்ணனின் திருமணம்,[18]
- ஜாம்பவதியையும், சத்தியபாமாவையும் கண்ணன் மணத்தல் - மிகச் சிறந்த சமந்தக மணி ஒன்றை, சத்தராசத்து என்னும் மன்னவன் வைத்திருந்தான். கண்ணன் அதனைத் தனக்குக் கேட்டான். மன்னன் சத்தராசத்து அதை கொடுக்கவில்லை. அவன் தம்பி அதனை அணிந்து கொண்டு காட்டில் வேட்டையாடச் சென்றான். சிங்கம் ஒன்று அவனைக் கொன்று மணியோடு இழுத்துச் சென்றது. கரடிகளின் அரசனான சாம்பவான் என்பவன் அந்தச் சிங்கத்தைக் கொன்று அந்த மணியைத் தன் மகள் ஜாம்பவதிக்குக் கொடுத்தான். கண்ணன் ஜாம்பவதியை மணந்து அந்த மணியைத் தனதாக்கிக்கொண்டான். நிகழ்ந்ததை அறிந்த மன்னன் சத்தராசித்து தன் மகள் சத்தியபாமா என்பவளையும் கண்ணனுக்கு மணம் செய்து வைத்தான்,[19]
- கண்ணன் தன்னை விரும்ப வேண்டி தவம் செய்த காளிந்தி என்பவளை மணந்தான்,[20]
- மித்திரவிந்தை என்பவளின் சுயம்வரத்துக்குச் சென்று அவளைக் கண்ணன் மணந்தான்,[21]
- ஏழு காளைகளை அடக்கி நாக்கினசிந்து என்பவளை கண்ணன் மணந்தான்,[22]
- பத்திரை என்ற என்பவளை கண்ணன் மணந்தான்,[23]
- வில் வளைத்து மர மீனை துளைத்து இலக்கணை என்பவளை கண்ணன் மணந்தான்,[24]
- உருக்மியின் திருமணம்,[25]
- கண்ணன் ஒரே நேரத்தில் 16,000 கோபிமார்களுடன் கூடி வாழ்ந்திருத்தலை நாரதர் காணுதல்.[26]
கண்ணனின் அரக்கர்களை வதை செய்தல்கள்
[தொகு]- கண்ணன் இந்திர வில்லை ஒத்த ஒரு வில்லை எடுத்து ஒடித்தல் மற்றும் சூழ்ந்து வந்த சேனையை கொல்லுதல்,[27]
- பூதனை வதை, சகடாசுரன் வதை, குக்குடாகரன் வதை,[28]
- மருதமரமாக வந்த ஒரு அசுரனின் வதை, பகாசூரன் வதை, அகாசூரன் வதை,[29]
- தேனுகன் வதை, காளியாகரன் வதை,[30]
- அரிஷ்டசுரன் வதை, கேசி வதை, வியோமசூரன் வதை,[31]
- தாருகன் வதை,[32]
- கம்சன் கண்ணனுக்கு எதிராக செய்யும் அழிந்து போன கொலை முயற்சிகள், குவலயாம்பீடம் வதை, சாணூரன் வதை, முஷ்திகன் வதை, கம்சன் வதை,[33]
- கண்ணால் நடந்த கம்சனின் வதையை கேட்டு அவன் மாமனாரகிய ஜராசந்தன் ஒரு படையொடு வந்து கண்ணனோடு போரிட்டுத் தோற்றோடுதல் மற்றும் அவர் படைகள் கண்ணனின் படைகளால் கொல்லபடுதல்,[34]
- முனிவர்க்குத் தீங்கிழைத்த அசுரன் கோமான் சிரகாளனை கண்ணன் கொல்லுதல்,[35]
- காளயாவனன் வதை,[36]
- சத்தியபாமாவின் தந்தையைச் சதத்தனுவன் என்பவன் கொன்றான். எனவே சதத்தனுவனைக் கண்ணன் கொன்றான்,[37]
- நரகாசுரனின் வதை,[38]
- பௌண்டரன் வதை, கதரிக்கனன் வதை, துவிந்தன் வதை,[39]
- அங்கிசமன் திபிகன் வதை,[40]
- சிசுபாலன் வதை, சாலுவன் வதை, தந்தவக்ரன் வதை.[41]
கண்ணனின் மகனனின் மற்றும் பேரனின் திருமணங்கள்
[தொகு]- கண்ணனின் மகனான சாம்பனின் திருமணங்கள்:
- பலராமனுக்கு அஞ்சி, துரியோதனன் தன் மகள் இலக்கணை என்பவளை, கண்ணன் மகன் சாம்பனுக்கு மணம் செய்து கொடுத்தல்,[42]
- வானகன் என்பவனோடு போரிட்டு அவன் மகள் உடாங்கனை என்பவளைத் தன் மகன் சாம்பனுக்கு மணம் முடித்துவைத்தல்,[43]
- கண்ணனின் பேரனான அனிருத்தனின் திருமணம்: அனிருத்தனை மாயவித்தனமாக கடத்தி வைத்த பானாசூரனின் மகளான உஷஸுடன் திருமணம் செய்வித்தல் மற்றும் பனாசசூரனை முருகன் கொன்றார்.
பாண்டவர்களின் கதை
[தொகு]- பாண்டவர்களுக்கு நேர்ந்த இன்னல்களை அக்ரூரன் சொல்லக் கண்ணன் கேட்டல்,[44]
- தருமன் இராசசூய வேள்வி செய்தான். அப்போது தன்னை எதிர்த்த சிசுபாலனை கண்ணன் வதைத்தல்,[45]
- சூதாட்டத்தில் கௌரவர்களிடம் தோற்ற பாண்டவர்களின் மனைவியான திரௌபதிக்கு வஸ்திரம் வளர அருள் பாலித்தல்,
- பாண்டவர்களின் வனவாசம்,[46]
- தருமனுக்கு வியாசர் குரு குலத்தின் வரலாறு சொல்லுதல்,[47]
- தட்சனின் வேள்வியை சிவன் மற்றும் பார்வதி அவர்களின் பூத கணங்களோடு சேர்ந்து அழித்த கதையை வியாசர் கூறுதல்,[48]
- அருச்சுனன் சிவனை நோக்கித் தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெறுதல், ஊர்வசியிடம் இருந்து அவளை தன் முன்னோர் என்பதால் மணக்காததால் ஒரு பெண்ணாக ஒரு ஆண்டிற்கு மாறி விட சாபம் பெறுதல்,[49]
- வீமன் மந்தார மலரை பெற்று திரௌபதிக்காக வருதல்,[50]
- சிறையிடப்பட்ட துரியோதரனை நாகங்கள் விடுவித்தல், சயித்திர பங்கம், நச்சு ஏரியின் வரலாறு,[51]
- விராடநகரம் வாசம், வீமனால் திரௌபதியை காக்க கீசகனை வதை செய்யுதல்,[52]
- கண்ணன் துரியோதனனுக்கு போர் வேண்டாம் என தூது விடுதல்,[53]
- குருச்சேத்திரப் போர்,[54]
- பலராமனின் தீர்த்த யாத்திரை,[55]
- வீமனால் துரியோதனன் மற்றும் மிச்சம் கௌரவர்களின் வதை.[56]
கண்ணனின் அருள்
[தொகு]- வனத்தில் இருந்த வேதியர் மனைவியருக்கு கண்ணன் அருள் செய்தல்,[57]
- கண்ணன் கோவர்த்தன கிரியைத் தூக்கல், இந்திரனின் மழையிலிருந்து மக்களை காத்தல், கண்ணன் குழல் ஊதுதல்,[58]
- அம்பிகா வனத்தில் நந்தனை நாகம் ஒரு பற்றி விழுங்க, கண்ணனின் திருவடி பட்ட மாத்திரத்தில் அந்த நாகம் ஒரு வித்தியாதரனாக ஆகி ஒரு விமானத்தில் சொர்க்கதுக்கு செல்லல்,[59]
- சுதாமகாவுக்கு கண்ணன் அருளுதல்,[60]
- திரீவக்கிரி என்ற கூனிக்கு கண்ணன் அருளுதல்,[61]
- உக்கிரசேணனின் முடிசூடுதல், இறந்துபோன முனிவரின் பிள்ளையை வருணனிடமிருந்து பெற்று, அவனின் தந்தை சாந்தீப முனிவருக்குக் குரு தட்சணையாகக் கொடுத்தல்,[62]
- கண்ணன் மதுராவில் இருக்கும்போது இடங்கன் ஆயர்பாடி சென்று கண்ணன் பழகிய ஆனிரைகளைப் பேணுதல்.[63]
பொது கதைகள்
[தொகு]- பெலம்பன் கதை,[64]
- உத்தரையின் வயிற்றில் அபிமன்யுவால் பரிச்சித்து பிறத்தல்,[65]
- மிதிலை மன்னனுக்கு கண்ணன் அருள் பாலித்தது,[66]
- குசேலர் கண்ணனிடம் அருள் பெற்றது,[67]
- தசாவதார நடிப்பு, அந்தணன் புதல்வனை மீட்டது,[68]
- உத்தவனுக்கு கண்ணனின் வழங்கும் உபதேசங்கள், அதில் யாதவர்கள் கன்வரிடம் அழியும் படி சாபம் பெறுதல், உத்தவன் கேட்கும் வின்னாக்களுக்குக் கண்ணன் பதில் சொல்லுதல்,[69]
- உத்தவருக்கு உத்தவ கீதையை கண்ணன் உபதேசித்தல்,
- துவாரகையில் இருந்தோர் சண்டையில் இறந்து உடனேயே முக்தி அடைதல்,[70]
- மார்க்கண்டேயரின் வரலாறு, விருகாசுரன் வதை,[71]
- பரீச்சித்து தட்சகன் அவரை கடித்து விஷம் வைத்து கொன்றதால் மோக்ஷம் அடைதல், சனமேயன் தன் தந்தைக்குக் இறுதி கடன் ஆற்றி மற்றும் அனைத்து தீய நாகங்களையும் ஒரு வேள்வியில் எரித்து கொன்று, சுகரிடம் பாகவதம் கேட்டு முக்தி அடைதல்,[72]
- பாரிசாத மலரைப் பெற்றுச் சத்தியபாமைக்குக் கண்ணன் கொடுத்தல்,[73]
- சுபத்திரையை அருச்சுணனுக்கு கண்ணன் மணம் செய்வித்தல்,[74]
- வசுதேவர் வேள்வி செய்தல்,[75]
- கண்டகருணன் முத்தி,[76]
- கண்ணனின் கயிலை யாத்திரை,[77]
- பிரத்திம்யும்மனனின் பிறப்பு, சம்புராசன் வதை, அநிருத்தனின் பிறப்பு,[78]
- ஓந்தியாய் இருந்த நிருகராசன் கதை.[79]
பிற கதைகள்
[தொகு]- கல்கியின் வரலாறு, கலி யுகத்தின் தருமம்,[80]
- வைணவ தேசங்களுக்குச் சாரமான விஷ்ணு பதிகள், மூர்த்திகள், தீர்த்தங்கள் ஆகியவற்றைக் கூறி வியாசர் பாகவதம் நூலை முடிக்கிறார்.
இதனையும் காண்க
[தொகு]கருவி நூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005
அடிக்குறிப்புக்கள்
[தொகு]- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005, பாகம் 1, பக்கம் 235
- ↑ படலம் 7-13
- ↑ படலம் 14
- ↑ படலம் 15-22
- ↑ படலம் 6
- ↑ படலம் 48
- ↑ படலம் 23
- ↑ படலம் 24
- ↑ படலம் 29
- ↑ படலம் 30
- ↑ படலம் 34
- ↑ படலம் 35-42
- ↑ படலம் 44
- ↑ படலம் 64
- ↑ படலம் 65
- ↑ படலம் 66-70
- ↑ படலம் 71-78
- ↑ படலம் 79
- ↑ படலம் 80-81
- ↑ படலம் 83
- ↑ படலம் 84
- ↑ படலம் 85
- ↑ படலம் 86
- ↑ படலம் 87
- ↑ படலம் 102
- ↑ படலம் 97-99
- ↑ படலம் 52
- ↑ படலம் 25-28
- ↑ படலம் 31-33
- ↑ படலம் 35-42
- ↑ படலம் 45-47
- ↑ படலம் 49
- ↑ படலம் 53-56
- ↑ படலம் 61
- ↑ படலம் 62
- ↑ படலம் 63
- ↑ படலம் 82
- ↑ படலம் 88
- ↑ படலம் 93-96
- ↑ படலம் 100
- ↑ படலம் 106-108
- ↑ படலம் 103
- ↑ படலம் 104
- ↑ படலம் 60
- ↑ படலம் 105
- ↑ படலம் 109
- ↑ படலம் 110
- ↑ படலம் 111
- ↑ படலம் 112
- ↑ படலம் 113
- ↑ படலம் 114
- ↑ படலம் 115
- ↑ படலம் 116
- ↑ படலம் 117
- ↑ படலம் 118
- ↑ படலம் 119
- ↑ படலம் 35-42
- ↑ படலம் 35-42
- ↑ படலம் 43
- ↑ படலம் 50
- ↑ படலம் 51
- ↑ படலம் 57-58
- ↑ படலம் 59
- ↑ படலம் 35-42
- ↑ படலம் 120
- ↑ படலம் 121
- ↑ படலம் 122
- ↑ படலம் 123
- ↑ படலம் 124
- ↑ படலம் 125
- ↑ படலம் 126-128
- ↑ படலம் 129-130
- ↑ படலம் 89
- ↑ படலம் 90
- ↑ படலம் 91
- ↑ படலம் 92
- ↑ படலம் 97-99
- ↑ படலம் 97-99
- ↑ படலம் 101
- ↑ படலம் 131