உள்ளடக்கத்துக்குச் செல்

மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் உள்ளது. அனந்தபத்ம சுவாமிக்கு அமைக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில், புதுக்கோட்டை நகரத்திற்கு வடக்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிபி 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்குடைவரைக் கோயில், கிபி 16-ஆம் வரை விரிவாக்கப்பட்டது.

இங்குள்ள இரண்டு குடைவரைக் கோயில்களில் ஒன்று அனந்தபத்மசுவாமிக்கும், மற்றொன்று சிவனுக்கும் உரியதாகும்.[1]இக்கோயிலின் மூலவர் அனந்தபத்மசுவாமி, தாயார் கமலவள்ளி நாச்ச்சியார் ஆவார்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

திருச்சி - கீரனூர் - கிள்ளுக்குடி வழியாக 17 கிமீ தொலைவிலும், மற்றொரு பாதையான திருச்சி - துவாக்குடி - பொய்யாக்குடி - அசூர் - செங்கலூர் வழியாகவும் செல்லலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Malayadipatti Rockcut Temples

வெளி இணைப்புகள்[தொகு]