உள்ளடக்கத்துக்குச் செல்

நங்கவள்ளி

ஆள்கூறுகள்: 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்கவள்ளி
—  பேரூராட்சி  —
நங்கவள்ளி
அமைவிடம்: நங்கவள்ளி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,809 (2011)

1,330/km2 (3,445/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.13 சதுர கிலோமீட்டர்கள் (3.14 sq mi)

385 மீட்டர்கள் (1,263 அடி)

இணையதளம் www.townpanchayat.in/nangavalli

நங்கவள்ளி (ஆங்கிலம்:Nangavalli), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.

அமைவிடம்

[தொகு]

தாரமங்கலம்மேட்டூர் சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் சேலம் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணையில் உள்ளது. இதன் மேற்கில் மேட்டூர் 21 கி.மீ.; வடக்கில் மேச்சேரி 8 கி.மீ.; தெற்கில் எடப்பாடி 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 74.48% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385 மீட்டர் (1263 அடி) உயரத்தில் இருக்கின்றது.

திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்

[தொகு]

இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில்,நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும்.இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும்,தேவாலயமும் இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும்.ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொழுதுபோக்குகள்

[தொகு]

நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. நங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்
  5. Nangavalli Population Census 2011
  6. "Nangavalli". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கவள்ளி&oldid=4250806" இலிருந்து மீள்விக்கப்பட்டது