திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, இராசிபுரம்
Appearance
வகை | அரசு கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 11 சூலை 1968 [1] |
முதல்வர் | பேரா. டி. ஆர். கணேசன் |
அமைவிடம் | இராசிபுரம், 637401 நாமக்கல் மாவட்டம் , , |
இணையதளம் | [1] |
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம் (Thiruvalluvar Government Arts College) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரத்தின் அருகில் உள்ள ஆண்டகலூர் பகுதியில் 40.05 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதி முதல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.[2] ஐந்து பல்கலைக்கழக புதுமுகத்திட்டங்களுடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரி கிராமப்புறத்தில் அமைந்திருந்தாலும், சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் [3] இணைவுபெற்றக் கல்லூரியாக இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.[4]
இளநிலைப் படிப்புகள்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- மனித உரிமையியல்
- அரசியல் அறிவியல்
- வணிகவியல்
- கூட்டுறவு
- தாவரவியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
- மண்ணியல்
- புள்ளியியல்
- புவியியல்
முதுநிலைப் படிப்புகள்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- மனித உரிமையியல்
- வணிகவியல்
- கூட்டுறவு
- தாவரவியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
- மண்ணியல்
- புள்ளியியல்
- புவியியல்