உள்ளடக்கத்துக்குச் செல்

சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா
Ibrahim Shah of Selangor
Sultan Ibrahim Shah, Selangor
சுல்தான் இப்ராகிம் அரச முத்திரை
2-ஆவது சிலாங்கூர் சுல்தான்
ஆட்சிக்காலம்1782 – 27 அக்டோபர் 1826
முன்னையவர்சுல்தான் சாலேவுதீன்
பின்னையவர்சுல்தான் முகமட் சா
சிலாங்கூர் யாங் டி-பெர்துவான் பெசார்
பிறப்புராஜா இப்ராகிம் பின் ராஜா லுமு (1736)
இறப்பு27 அக்டோபர் 1826 (வயது 89–90)
கோலா சிலாங்கூர், சிலாங்கூர்
புதைத்த இடம்
புக்கிட் மெலாவத்தி அரச கல்லறை, புக்கிட் மெலாவத்தி, கோலா சிலாங்கூர்
வாழ்க்கைத் துணைகள்
  • கெடா துங்கு சிக்
  • கம்போடியா அந்தக் பிந்தி டேங் (இ. 1776)
  • சிக் லோங் அலிஜா பிந்தி டாயேங் லோக்லோக் உசைன்
  • எஞ்சிக் சலாமா
  • எஞ்சிக் சைமா
  • துன் சலாமா பிந்தி துன் அப்துல் மஜித் (இறப்பு 1784)
  • தெங்கு அம்புவான் ராஜா தெங்கா அல்மர்கும் ராஜா அஜி. (m. 1796)
பெயர்கள்
Raja Ibrahim bin Raja Lumu
பட்டப் பெயர்
Sultan Ibrahim Shah ibni Almarhum Sultan Salehuddin Shah
மரபுஅரச லூவு பூகிஸ்
ஒப்பு டாயேங் செலாக்
தந்தைசுல்தான் சாலேவுதீன் சா இப்னி யாம் துவான் மூடா ரியாவ் II ஒப்பு டாயேங் செலாக்
தாய்எங்கு புவான் பிந்தி பதுகா செரி சுல்தான் அலாவுதீன் ரியாவ் ரியாட் சா
மதம்சன்னி

சுல்தான் இப்ராகிம் சா அல்லது சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா (ஆங்கிலம்: Ibrahim Shah of Selangor; மலாய்: Sultan Ibrahim Shah ibni Sultan Salehuddin Shah ibni Yamtuan Muda Riau II Opu Daeng Chelak; (சாவி: سلطان إبراهيم شاه ابن المرحوم سلطان صالح الدين شاه; சீனம்: 雪兰莪州的依布拉欣沙) (1736 – 27 அக்டோபர் 1826) என்பவர் 1782 முதல் 1826 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 2-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார்.[1]

இவர் ஒரு வலிமையான; மற்றும் துடிப்பான ஆட்சியாளராக அறியப் படுகிறார். இவர் ஓர் ஆங்கிலோ பண்பாட்டு ஆர்வலராகவும் (Anglophile) இருந்தார்.[2] சூலை 13, 1784 அன்று, இடச்சுக்காரர்கள் கோலா சிலாங்கூரைக் கைப்பற்றினார்கள்.[3] அந்தக் கட்டத்தில் அந்தப் பகுதியைப் பாதுகாக்க மெலாவத்தி கோட்டை இருந்த போதிலும் கோலா சிலாங்கூர் கைப்பற்றப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

கோலா சிலாங்கூர் கைப்பற்றப்பட்ட பின்னர், சுல்தான் இப்ராகிம் சா பதவி நீக்கம் செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டார்.[2] 1785-ஆம் ஆண்டு பகாங் மாநில உதவியுடன், சுல்தான் இப்ராகிம் மேற்கொண்ட ஒரு தாக்குதலில் மெலாவத்தி கோட்டையை மீண்டும் கைப்பற்றினார்.[4]

சுல்தான் இப்ராகிம் சா, பேராக் பகுதியில் சயாமியர்களின் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பேராக் சுல்தானகத்திற்கு பெரிதும் உதவினார். அதன் பிறகு, தான் செய்த உதவிக்கு பாதுகாப்புப் பணம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.[5]

1818-ஆம் ஆண்டில் சிலாங்கூர், ஐக்கிய இராச்சியத்துடன் அரசியல் உறவுகளைத் தொடங்கியது.[6] இருப்பினும், சுல்தான் இப்ராகிம் சாவின் வாரிசான சுல்தான் முகமட் சா அரியணை ஏறிய பிறகு, கோலா சிலாங்கூர் பகுதி குறிப்பிட்ட அளவிற்கு சிதைவு அடைந்தது. அங்கு கடற்கொள்ளைகள் மிகுந்தன; மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து வரிகள் வசூலிக்கப்பட்டன; இவையே பின்னர் நாட்களில், உள்ளூர் மக்களின் குடி பெயர்வுகளுக்கும் வழிவகுத்தன.[2][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ahmad Farhan Abdullah Zakaria; Mohd Samsudin (July 2019). "Pembentukan Istilah dan Stratifikasi Aristokrat Melayu Selangor Era Sultan Salehuddin, Sultan Selangor Pertama, 1766-1782". Journal of Southeast Asia Social Sciences & Humanities 89 (2 (2019)). பன்னாட்டுத் தர தொடர் எண்:0126-5008. http://ejournals.ukm.my/akademika/article/view/26663/9683. 
  2. 2.0 2.1 2.2 Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. p. 214.
  3. "Bukit Melawati - Kuala Selangor, Selangor Malaysia". JourneyMalaysia.com. Retrieved 2018-09-24.
  4. Leong, Ewe Paik (2017). "More than fireflies in Kuala Selangor". New Straits Times. Retrieved 2018-09-24.
  5. The Royal Asiatic Society (1933). Journal Of The Malayan Branch Of The Royal Asiatic Society Vol-XI (in ஆங்கிலம்). The Malayan Branch Of The Royal Asiatic Society, Singapore. p. 11.
  6. Great Britain. Colonial Office (1890). Papers Relating to the Protected Malay States [Annual Report]. p. 26. Retrieved 2018-09-24.
  7. "Political and statistical account of the British settlements". eresources.nlb.gov.sg. Retrieved 2023-03-05.
அரச பட்டங்கள்
முன்னர் சிலாங்கூர் சுல்தான்
1778–1826
பின்னர்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]