உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய உயர்கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்திய உயர்கல்வி நிறுவனத்தின் கட்டிடம்

இந்திய உயர்கல்வி நிறுவனம் (Indian Institute of Advanced Study (சுருக்கமாக:IIAS), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத் தலைநகரான சிம்லா நகரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ளது[1] ஆய்வுப் படிப்புகளுக்கான இந்நிறுவனம் 20 அக்டோபர் 1965 முதல் செயல்படுகிறது.[2] இது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

வரலாறு மற்றும் நிறுவுதல்

[தொகு]

இந்நிறுவனம் 6 அக்டோபர் 1964 அன்று பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இந்நிறுவனத்தை முறைப்படி 20 அக்டோபர் 1965 அன்று திறந்து வைத்தார். இதன் முதல் இயக்குநர் நிகரஞ்சன் ராய் ஆவார்.

ஆய்வுப் பிரிவுகள்

[தொகு]
  • மனிதநேயப் படிப்புகள்
    • கலைகள் மற்றும் அழகியல்
    • இலக்கியங்களின் ஒப்பீட்டு ஆய்வு
    • சமயம் மற்றும் தத்துவம்
  • சமூக அறிவியல்கள்
    • மேம்பாட்டு ஆய்வு
    • அரசியல் நிறுவனங்களின் ஒப்பீட்டு ஆய்வு
    • வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சமூக-பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார உருவாக்கம் .
  • இயற்கை மற்றும் வாழ்க்கை அறிவியல்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அரசு கொள்கைகள் வகுத்தல்
    • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு
    • முறைகள் மற்றும் நுட்பங்கள்.

உதவித் தொகை

[தொகு]

இந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரையும்; அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

படக்காட்சிகள்

[தொகு]

இந்திய உயர் கல்வி நிறுவனத்தின் கட்டிடங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "HP Govt. website". Archived from the original on 27 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 August 2006.
  2. "Official website". Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 31 August 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]