அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்
Appearance
குறிக்கோளுரை | கல்வியின் மூலமாக அதிகாரமளித்தல் |
---|---|
வகை | அரசினர் மகளிர் கலைக்கல்லூரி |
உருவாக்கம் | 1972 (ஆண்கள் கலைக்கல்லூரியாக) |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | முனைவர் கே. என். கீதா (பொறுப்பு) |
அமைவிடம் | , , |
இணையதளம் | govtwomencollegeslm8.org/ |
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சேலம்- ஏற்காடு சாலையில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] 1972ஆம் ஆண்டில் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1979ஆம் ஆண்டில் பெண்கள் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.[2] தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) 3 நட்சத்திர தகுதியுடன் மொத்தமாக 14.71 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் ச. மணிமொழி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]
வழங்கும் படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன:
முதுகலைப் படிப்புகள்[தொகு]
- முதுகலை கணினி அறிவியல்
- முதுகலை கணிதம்
இளநிலைப் படிப்புகள்[தொகு]
- இளங்கலை தமிழ்
- இளங்கலை வேதியியல்
- இளங்கலை வணிகவியல்
- இளங்கலை மின்னணுவியல்
- இளங்கலை கணிதம்
- இளங்கலை கணினி அறிவியல்
- இளங்கலை ஆங்கிலம்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தினமலர் கல்விமலர்
- ↑ "சென்னை ஆன்லைன்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
- ↑ பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
- ↑ "14.71 ஏக்கரில் செயற்பட்டுவரும் சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
- ↑ "சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.