அப்பாத் தீவு
Appearance
புவியியல் | |
---|---|
பரப்பளவு | 0.2043 km2 (0.0789 sq mi) |
நிர்வாகம் | |
இந்தியா | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | இராமேசுவரம் |
அப்பாத் தீவு (Appa Tivu or Appa Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
விளக்கம்
[தொகு]இத்தீவானது கீழக்கரையிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பவளப் பாறைகள் காணப்படுகின்றன.[1] இது அப்பாத் தீவு 1, அப்பாத் தீவு 2 ஆகிய இரு தொகுதிகளைக் கொண்டது. இவை ஒரு மணல் திட்டால் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]