வலைவாசல்:தமிழிலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தமிழிலக்கிய வலைவாசல்


தொகு  

தமிழிலக்கிய வலைவாசல் உங்களை வரவேற்கிறது


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தமிழ் இலக்கியம் பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


சிலப்பதிகாரம் சமணமத நூல் ஆயினும் இந்நூலினைப் படிக்குங்கால் இது மதசார்பற்ற நூல் என்றே தோன்றுமாறு இளங்கோவடிகள் இதனை யாத்துள்ளார். இந்நூலில் புத்த சமயக் கருத்துக்ள் மட்டுமன்றி பிற சமயக் கருத்துகளும் இடம் பெறுகின்றன. சிலப்பதிகாரம் சமணமத நூலாகும். ஆயினும் அந்நூலில் எந்த மதத்தினரையும் புண்படுத்தாத கருத்துக்களே உள்ளன. சிலப்பதிகாரத்தில் மத வேறுபடுகளைக் காண முடியாது. மாதரி எனும் இடைக்குல முதுமகள் கண்ணனை வழிபடும் வைணவ சமயத்தைச் சார்ந்தவளாயினும், இயக்கிக்கு பான்மடை கொடுத்து மீளும் ஏல்வையில் கவுந்தியடிகளைக் கண்ணில் கண்டு அவரை வணங்கிய செயலை அறியலாம். சேரன் செங்குட்டுவன் வட நாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அங்கிச்சாலையில் செய்த வேண்டுதலோடு நிற்காமல் சிவபெருமான் கோட்டம் புகுந்து அவர் தம் அடிகளையும் வணங்கினான். அங்குள்ள அரிதுயிலமர்ந்த பெம்மானுக்கு( திருவனந்தபுர பத்மநாபசாமி என்பர்) கடவுள் பணிபுரியும் சிலர் மாலையும் மலரும் கொணர்ந்து வாழ்த்தியளிக்க, அவற்றினைச் செங்குட்டுவன் தன் தோளின் மிசையணிந்தான். மேலும் சிலப்பதிகாரம், அலைவாய் முருகன் கோட்டத்தையும் திருச்செங்கோட்டினையும், ஏரகத்தையும், வெண்குன்றினையும் கூறுகிறது.

தொகு  

தமிழ் இலக்கியம் குறித்த பகுப்புகள்


தொகு  

இலக்கியவாதிகள்


ஔவை துரைசாமி
ஔவை துரைசாமி (செப்டம்பர் 5, 1902 - ஏப்ரல் 3, 1981) தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1902 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரீசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ "உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்" பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் இல்லாமல் ஆறே மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார்.

தொகு  

சிறப்புப் படம்


திருவள்ளுவர்
திருவள்ளுவர்
படிம உதவி:

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • வடக்கிருத்தல் என்பது ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதாகும்.
  • அசும்பு என்பது சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் மலைப்பகுதியிலும், வயலோரங்களிலும் நீர் கசிந்தோடும் வாய்க்காலாகும்.
  • காஞ்சி மரத்துக்கு 'செம்மருது' என்னும் பெயரும் உண்டு.
தொகு  

தொடர்பானவை


தொகு  

இலக்கியம் குறித்த பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • தமிழிலக்கியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழிலக்கியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழிலக்கியம்&oldid=1986913" இலிருந்து மீள்விக்கப்பட்டது