வண்ணம் (யாப்பருங்கல நெறி)
Appearance
தொல்காப்பியர் 20 வகை வண்ணங்களைக் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம் என்னும் நூலின் விருத்தியுரையில் பாடல்களில் காணப்படும் வண்ணங்கள் மேற்கோள் பாடல்களுடன் விளக்கப்பட்டுள்ளன. [1]
வண்ணம் - எடுத்துக்காட்டுடன்
[தொகு]1
[தொகு]- உயிர் மிக்கு வந்த வண்ணம்
- ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோ
- கையாயோ ஐய களிறு
- ஐயா! களிற்றை எய்யமாட்டாயா
2
[தொகு]- மெய் மிக்கு வந்த வண்ணம்
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
- பற்றுக பற்று விடற்கு
3
[தொகு]- உயிர்மெய் மிக்கு வந்த வண்ணம்
- படைகுடி கூழ்அமைச்சு நட்புஅறன் ஆறும்
- உடையான் அரசருள் ஏறு
4
[தொகு]- குறிலெழுத்து மிக்கு வந்த வண்ணம்
- கற்க கசடறக் கற்பவை கற்றபின்
- நிற்க அதற்குத் தக
5
[தொகு]- நெடில் எழுத்து மிக்கு வந்த வண்ணம்
- யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
- சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு
6
[தொகு]அளபெடை பெற்று வந்த வண்ணம்
- ஏஎர் சிதைய அழாஅல் எலாஅநின்
- சேயரி சிந்திய கண்
7
[தொகு]
- வல்லினம் மிக்கு வந்த வண்ணம்
- தெறுக தெறுக தெறுபகை தெற்றால்
- பெறுக பெறுக பிறப்பு
8
[தொகு]- மெல்லெழுத்து மிக்கு வந்த வண்ணம்
- மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
- காடும் உடையது அரண்
9
[தொகு]- இடையெழுத்து மிக்கு வந்த வண்ணம்
- வயல்உழுவார் வாழ்வாருள் வாழ்வார் அயல்உழுவார்
- வாழ்வாருள் வாழா தவர்
10
[தொகு]- குற்றியலுகரம் மிக்கு வந்த வண்ணம்
- குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது
- கருப்புச் செறுப்புப் பரப்பு
- கரும்பின் குருத்தை வெட்டி எறிந்துவிட்டு
- வயலில் பரப்பு
11
[தொகு]- குற்றியலிகரம் வந்த வண்ணம்
- குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
- மழலைச்சொல் கேளாத வர்
- சிலையன் செழுந்தழையன் சென்மியா என்று
- மலையகலான் மாடே வரும்
அவன் தழையாடையுடன் வருகிறான்
12
[தொகு]- ஆய்த வண்ணம்
- அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
- வெஃகி வெறிய செயின்
13
[தொகு]- ஐகாரக்குறுக்க வண்ணம்
- படுமழைத் தண்மலை வெற்பன் உறையும்
- நெடுந்தகையைக் கண்டதாம் நாள்
- வெற்பனை ஒருநாள் பார்த்தேன்
14
[தொகு]- ஔகாரக் குறுக்க வண்ணம்
- நௌவிமான் நோக்கினார் அவ்வாய் மணிமுறுவல்
- வௌவாதார் கௌவை இலர் [2]
- ஔவித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
- தௌவையைக் காட்டி விடும்
15
[தொகு]- மகரக் குறுக்க வண்ணம்
- தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
- தம்தம் வினையான் வரும்
- தாம்வீழ்வார் தம்வீழப் பெறவர் பெற்றாரே
- காமத்துக் காழில் கனி [3]