பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் | |
---|---|
தமிழறிஞர் | |
பிறப்பு | 1862 செப்டம்பர் 10 பின்னத்தூர் (திருத்துறைப் பூண்டித் தாலுகழா)]] |
இறப்பு | 1914 சூலை 30 |
பணி | பேராசிரியர் |
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1862 செப்டம்பர் 10 - 1914 சூலை 30]), தமிழறிஞர்; உரையாசிரியர்; நினைவாற்றல் கலைஞர்; கவிஞர்; தமிழாசிரியர். மொழிபெயர்ப்பாளர்.
பிறப்பு[தொகு]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூர் என்னும் சிற்றூரில் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கடகிருட்டிணன் – சீதாலட்சும் இணையருக்கு மூத்தமகனாக 1862 செப்டம்பர் 10 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள் என்பது ஆகும். இவருக்கு மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும் இருந்தனர்.[1]
கல்வி[தொகு]
நாராயணாசாமி தனது தொடக்கக்கல்வியை கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியரின் திண்ணைப்பள்ளியில் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை மறைக்காட்டில் தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார்.
பணி[தொகு]
இவர் 1899 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.[2]
உரை[தொகு]
இவர் சங்க இலக்கியத்தில் ஒன்றான நற்றிணைக்கு உரை எழுதி இருக்கிறார்.[2] இந்நூல் சென்னபட்டணம். சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில் இராக்ஷச ௵ வைகாசி ௴ அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பு[தொகு]
காளிதாசன் வடமொழியில் இயற்றிய பிரகசன என்னும் நாடகநூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.[2]
இயற்றிய நூல்கள் [3][தொகு]
- நீலகண்டேசுரக் கோவை
- இடும்பாவன புராணம்
- இறையனாற்றுப்படை
- சிவபுராணம்
- சிவகீதை
- நரிவிருத்தம்
- மாணாக்கராற்றுப்படை (1900)
- இயன்மொழி வாழ்த்து
- தென்றில்லை (தில்லைவளாகம்) உலா
- தென்றில்லைக் கலம்பகம்
- பழையது விடு தூது
- மருதப்பாட்டு
- செருப்பு விடு தூது
- தமிழ் நாயக மாலை
- களப்பாழ்ப் புராணம்
- இராமாயண அகவல்
- அரதைக்கோவை
- வீர காவியம்
- வன்மீகரும் தமிழும்
மறைவு[தொகு]
நாராயணசாமி நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் 1914 சூலை 30 ஆம் நாள் மறைந்தார்.[2]