ந. சின்னப்பன்
Appearance
ந. சின்னப்பன் (பி: 1950) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் கிறிஸ்துவ மறை போதகராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துத் துறையில் சத்தியதாசன், சத்தியக்கவி, புனிதன் எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசியப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. "குறளின் குரல்" என்னும் தலைப்பில் 50 வார விளக்கத் தொடர் கட்டுரையை தமிழ் மலரில் (1968) எழுதியுள்ளார். பாரதியின் குரல்" என்னும் கையெழுத்து இதழின் (1969) துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
பரிசுகளும் விருதுகளும்
[தொகு]- பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.
உசாத்துணை
[தொகு]- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ந. சின்னப்பன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்