சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார் | |
---|---|
பெயர்: | சிறப்புலி நாயனார் |
குலம்: | அந்தணர் |
பூசை நாள்: | கார்த்திகை பூராடம் |
அவதாரத் தலம்: | ஆக்கூர் |
முக்தித் தலம்: | ஆக்கூர் |
- “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை
சிறப்புலி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய்த் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தோதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்[2].
ஆயிரத்தில் ஒருவர்
[தொகு]ஆக்கூர் தாந்தோன்றீஸ்வரருக்கு "ஆயிரத்தில் ஒருவர்" என்ற பெயரும் உண்டு. சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது வழக்கம். ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன் தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார். இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). சிறப்புலி நாயனார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) CS1 maint: year (link) - ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link) - ↑ "சிறப்புலி நாயனார் – ஆயிரத்தில் ஒருவரின் அடியார்". Archived from the original on 2022-03-08. Retrieved 2022-03-08.
உசாத்துணைகள்
[தொகு]- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்