உள்ளடக்கத்துக்குச் செல்

சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம்

சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம் (Sattur A. G. Subramaniam) கருநாடக இசையின் பாரம்பரியப் பாடகராவார். அரியக்குடி சிறீ இராமானுசர் ஐயங்கார், சிறீ ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் ஆகியோரின் சமகாலத்தவரான இவர், தூய்மையான, கலப்படமற்ற பாணியில், பாரம்பரியத்தை கடுமையாகக் கடைப்பிடிப்பதற்காக அறியப்பட்டார். இவரது குரல்கள் புருகாக்களில் அதிக வேகத்தில் செழுமைப்படுத்தப்பட்டன.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம், திருச்சி அங்கரையில் கணேசு சாத்திரிகள், தைலம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்ப ஆண்டுகளை அருகிலுள்ள விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் தனது மாமாவுடன் வாழ்ந்து வந்தார். மேலும் "பக்திப் பாடகர்களிடத்தில்" பக்திப் பாடலுக்கு ஆளாகியிருந்தார். இசை மீதான தனது ஆர்வத்தைத் தொடர இவர் சிதம்பரத்தின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு திருவையாறு சபேசா ஐயர், தஞ்சாவூர் பொன்னையா பிள்ளை, டைகர் வரதாச்சாரியார் போன்ற புகழ்பெற்ற மேதைகளிடம் பயிற்சிப் பெற்றார்.

கல்வி

[தொகு]

1936 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது சங்கீத பூஷண் பட்டயப் படிப்பைப் பெற்றார். அங்கு திருவையாறு சபேசா ஐயர், தஞ்சாவூர் பொன்னையா பிள்ளை போன்ற பிற புகழ்பெற்ற தலைவர்களால் கற்பிக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையிடமிருந்து "சங்கீத கலா சிகாமணி" யைப் பெறுதல்

பாடும் பாணி

[தொகு]
உமாயல்புரம் கே. சிவராமன், லால்குடி ஜி. ஜெயராமன் ஆகியோருடன்.

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் ஆசீர்வாதத்துடன், 1937 இல் திருவையாற்றில் நடந்த சத்குரு தியாகராசர் விழாவில் தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார். அதன்பிறகு, இளம் கலைஞரைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஸ்ரீ சுப்பிரமணியம் கம்பீரமான குரலைக் கொண்டிருந்தார் (தமிழில் 'வெங்கலக் குரல்' என்று அழைக்கப்படும் 'இராவை சரீரம்'), மேலும் சிக்கலான கமகங்களையும் புருகங்களையும் தெளிவுடன் உருவாக்க முடியும். பல மொழிகளில் சரளமாக பேசக்கூடிய இவர், பாடிய பாடல்களிலுள்ள "பாவ" என்ற அர்த்தத்தையும், உணர்ச்சியையும், வெளிப்படுத்தும் தெளிவான சொற்பொழிவைக் கொண்டிருந்தன. இவரது "பாணி" அல்லது "பட்டந்திரம்" தூய்மையானதாகவும், உண்மையானதாகவும், பாரம்பரியத்தை கண்டிப்பாக கடைப்பிடிப்பதாகவும் கருதப்பட்டது.

"கடைசி வரை தூய்மையானவர், இவரது இராக ஆலாபனைகளும், பல்வேறு இராகங்களில் பல்லவி விரிவாக்கம் ஆகிய நிபுணத்துவம், இலட்சண- இலட்சிய நேர்த்தியுடன், மனோதர்மாவின் உயர்மட்ட கலை உற்சாகத்தின் தலைசிறந்த படைப்புகள்" [1]

இவரது இசை ஜி. என். பி, மதுரை மணி ஐயர், அரியக்குடி இராமானுச ஐயங்கார் போன்ற இவரது சமகாலத்தவர்கள் பலருக்கு அவரை நேசிக்க வைத்தது.

கோயம்புத்தூரில் சிறீராம நவமி கச்சேரிகளைத் தொடங்கி வைப்பது சிறந்த பாடகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு பாக்கியமாகும். இவருக்கு இச்சலுகை பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டது.

சீடர்கள்

[தொகு]

ஏ. ஜி. எஸ் மிகவும் நேசிக்கப்பட்ட குருவாக இருந்தார். இவர் தனது அனைத்து சீடர்களிடமும் பாசமாக இருந்தார். சிர்காழி வி. ஆர். சுப்பிரமணியம், சிர்காழி ஆர். ஜெயராமன், முசிரி ரங்கராஜன், சீதாமணி சீனிவாசன், சுலோச்சனா பட்டாபிராமன், திருச்சி என். நடராஜன் உள்ளிட்ட பலர் இவரது புகழ்பெற்ற சீடர்களாவர். சாந்தி சிறீராம் (அமெரிக்கா) உமா குமார் (சுவிட்சர்லாந்து), கிருஷ்ணா இராமரத்தினம் (ஆத்திரேலியா) ஆகியோர்கள் தொடர்ந்து தனது பாரம்பரியத்தை நிகழ்த்துகிறார்கள், கற்பிக்கிறார்கள், நிலைநிறுத்துகிறார்கள்.

மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், அரியக்குடி இராமானுஜா ஐயங்கார் ஆகியோருடன்.

இசை

[தொகு]

இன்று இவரது இரண்டு கிராமபோன் பதிவுகளும், மூன்று கேசட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indian heritage".