சங்கீதா திங்க்ரா சேகல்
சங்கீதா திங்க்ரா சேகல் | |
---|---|
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம் | |
பதவியில் 15 திசம்பர் 2014 – 30 மே 2020 | |
பரிந்துரைப்பு | எச். எல். தத்து |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1958 சண்டிகர், இந்தியா |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் |
சங்கீதா திங்க்ரா சேகல் (Sangita Dhingra Sehgal-பிறப்பு: 20 சூன் 1958) ஓர் இந்தியச் சட்ட நிபுணர். இவர் 15 திசம்பர் 2014 முதல் தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் 21 மே 2020 அன்று பதவி விலகினார்.
பணி[தொகு]
சங்கீதா, சண்டிகரில் 20 சூன் 1958இல் பிறந்தார். சண்டிகரில் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியினை முடித்தார். 1981ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இவர் 26 சூலை 1985-இல் தில்லி நீதித்துறை பணியில் சேர்ந்தார். 2000 முதல் 2003 வரை கூடுதல் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றினார். 2003 முதல் 2004 வரை இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். இவர் ஏப்ரல் 2013 முதல் திசம்பர் 2014 வரை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் இருந்தார். சங்கீதா 15 திசம்பர் 2014 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். 2 சூன் 2016 அன்று நிரந்தர நீதிபதியானார். மேலும் 21 மே 2020 அன்று நீதிபதி பதவியிலிருந்து விலகி தில்லி மாநில நுகர்வோர் மன்ற குறைதீர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Justice Sangita Sehgal resigns from Delhi HC to join as State Consumer Commission chief". https://indianexpress.com/article/cities/delhi/justice-sangita-dhingra-sehgal-resigns-consumer-dispute-redressal-commission-chief-6420775/.
- ↑ "Justice Sangita Dhingra Sehgal to join Delhi State Consumer Disputes Redressal Commission as its President". https://www.barandbench.com.