காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு மையம்
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1989 |
அமைவிடம் | லாசுபேட்டை , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | புதுவைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://kmcpgs.py.gov.in/ |
காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு நிறுவனம் (Kanchi Mamunivar Government Institute for Post Graduate Studies and Research), புதுச்சேரியின் லாசுபேட்டையில் அமைந்துள்ள முதுகலை பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். இது 1989ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் முதுகலை படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவர உயிரியல் மற்றும் பயோடெக்னாலஜி
- விலங்கியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகம்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- பிரஞ்சு
- வரலாறு
- பொருளாதாரம்
- வர்த்தகம்
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Affiliated College of Pondicherry University". Archived from the original on 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
வெளி இணைப்புகள்[தொகு]
- "-:: KANCHI MAMUNIVAR CENTER FOR POSTGRADUATE STUDIES ::-". kmcpgs.puducherry.gov.in. Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.