விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/2008
- நீலகிரியில் வாழும் தோடர் இனமக்களின் வாழ்வில் எருமைகள் பெற்றுள்ள சிறப்பு காரணமாக இவர்களை மாந்தவியலாளர்கள் எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.
- அமெரிக்க நாட்டில் உள்ள டென்வர் நகரம் கடல்மட்டத்தில் இருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பதால் இதனை மைல் உயர நகரம் என்றும் அழைப்பர்.
- வாழும் பறவைகளுள் மிகப்பெரியது தீக்கோழி(Struthio camelus) ஆகும்.
- உலகிலே அதிக மக்கள் தாய் மொழியாக கொண்ட மொழி சீன மொழி.
- இன்று கிடைக்கப்படும் மிகப் பழைய (2300 வருடங்கள்) தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- பாம்புகளிலேயே கருப்பு மாம்பா எனப்படும் பாம்பு தான் வேகமாக ஊரவல்ல பாம்பு. இது மணிக்கு 20 கி.மீ வேகத்தில் சிறு தொலைவு செல்லக்கூடியது.
- இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் சாவுகளில் ஏறத்தாழ அனைத்தும் குறிப்பிட்ட நான்கு வகைப் பாம்புகளாலேயே ஏற்படுகின்றன.
- அணத்தானா (Anathana) என்ற பேரினத்தின் பெயர் அணத்தான் என்ற கொறிணியின் தமிழ்ப் பெயரினாலேயே ஏற்பட்டது.
- மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம்.
- தமிழ்நாட்டின் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடு.
- தாய்லாந்து நாட்டில் உள்ள புலிக்கோவிலில் புலிகள் புத்த பிக்குகளுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
- 0.999... என்பதன் மதிப்பு மிகத்துல்லியமாக 1.
- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு
- பெட்ட குறும்பர் இன மக்களிடையே மொத்தம் பதினாறே பெயர்கள் மட்டுமே உண்டு.
- மலமலசர் மொழியில் தாடி என்பதற்கு தனிச்சொல்லே கிடையாது. தாடியைக் கீழ் மீசை என்றே அழைப்பர்.
- கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
- ஒட்டகம் உண்பதற்கு புல் போன்ற உணவுகள் கிடைப்பின் 10 மாதங்கள் வரை நீர் அருந்தாமல் வாழக்கூடியது.