விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 8, 2011
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Morarji_Desai_1978.jpg/100px-Morarji_Desai_1978.jpg)
- இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய் (படம்).
- "ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் சுரதா.
- விண்மீன்களைக் கொண்டு இரவில் மணி அறியும் கலை தொன்று தொட்டு இந்தியாவில் வழக்கத்தில் இருந்திருப்பற்குச் சான்றாகத் தமிழில் 27 சிறிய ஓரிரண்டு வரிப் பாடல்களும் வடமொழியில் 27 ஒரு வரி வாய்பாடுகளும் உள்ளன.
- நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழையையும் பனிப்பொழிவையும் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும்.
- இயேசுப் பல்லி என்றழைக்கப்படும் பல்லி நீரில் நடக்கும் திறன் உடையது.