விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 26, 2014
- ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய அசன்பே சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.
- பௌவென் முடிச்சு (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.
- இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் கணினிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.