விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 28, 2010
Appearance
- இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி பாரதியார் (படம்) ஆவார்.
- சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் 63 நாயன்மார்களுள் ஒருவர் அல்லர்.
- ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா இரைப்பைக் குடற்புண் மற்றும் இரைப்பைப் புற்று நோய் போன்ற நோய்களை உண்டாக்கவல்லது.
- இரவுநேர வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது புவி வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். ஆனால் சூரியன் மட்டும் இதற்கு விதிவிலக்காகும்.
- மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளில் ஒன்றான கேழல்மூக்கன் பிற தவளையினங்களைப் போலன்றி தன் வாழ்நாளைப் பெரும்பாலும் நிலத்தடியிலேயே கழிக்கும்.
- மீரா(1945) படத்தில் இடம்பெற்ற “காற்றினிலே வரும் கீதம்” பாடலை எழுதியவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
- 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன் எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டான சுடோக்கு யப்பான் நாட்டில் 1986 ஆம் ஆண்டில் அறிமுகமானது.