விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 7, 2010
Appearance
- தமிழக அரசு 1970-ம் ஆண்டு அங்கீகரித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 1891ம் ஆண்டு பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் எனற நாடகத்தில் இடம் பெற்ற தமிழ் தெய்வ வணக்கப் பாடல் ஆகும்.
- ரோம எண்ணுருவில் சுழியத்தை குறிக்கும் எண்ணுருக்கள் இல்லை; இடமதிப்பு சார்ந்த எண்முறையில் இல்லை.
- பைக்கால் ஏரி உலகின் மிக ஆழமான ஏரியாகும். உருசியாவின் தென் சைபீரியா மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஏரி பூமியினை சுற்றியுள்ள மொத்த நன்னீர் நிலைகளில் 20 சதவிகித நன்னீரினை தன்னகத்தே கொண்டுள்ளது.
- ஒரு கடதாசியை 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்கமுடியாது என்பதை அறிவீரா?, அது எவ்வளவு மெலிதாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்க இயலாது.
- ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகைக்கும் வேறுபாடு உண்டு.
- 1895 இல் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்பது தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினம் ஆகும்.