விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 14, 2010
Appearance
- ஹபிள் தொலை நோக்கி (படம்) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தில் நடந்ததை நமக்குக் காட்டும் காலப் பொறியாகச் செயல்படுகிறது.
- புகழ் பெற்ற கருநாடக இசைப் பாடலான "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!" வை எழுதியவர் மூதறிஞர் இராஜாஜி ஆவார்.
- சண்டிகர் நகரம் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்குமே தலைநகராக விளங்கினாலும் இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல.
- காந்தியின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை முதன் முதலில் அமெரிக்க நாடு தான் வெளியிட்டது.
- 'தி ஜங்கிள் புக்' நூலின் ஆசிரியரான ருத்யார்டு கிப்ளிங்க் தனது புத்தகங்களின் பழைய பதிப்புகளின் அட்டையில் ஸ்வஸ்திகா சின்னத்தைப் பயன்படுத்தியிருந்தார்.
- வெள்ளைக் காண்டாமிருகம் என அறியப்படும் வெள்ளை மூக்குக்கொம்பன் உண்மையில் சாம்பல் நிறமுடையது.
- சங்க காலத்தில் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது.