விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 19, 2011
2011ஆம் ஆண்டு ஏற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அறியப்படும் கென்யா, சோமாலியா, உகாண்டா முதலிய நாடுகளைக் கடுமையாகத் தாக்கி இன்றுவரை கிட்டத்தட்ட 29,000 பேர் இறந்துள்ளனர். கடுமையான வறட்சி, மனித உதவியின்மை போன்ற காரணங்களால் இப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோமாலியாவில் தொடர்ந்து வரும் தீவிரவாதமும் இதற்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. இவ்விடங்களில் ஐ.நா.வும் இன்னபிற தன்னார்வல அமைப்புகளும் பல உதவிகள் செய்துவருகின்றன. தபாப் எனும் இடத்தை அடையப் பல நாட்கள் உணவின்றிப் பாலைவனத்தில் நடந்து இறந்த போன 70 குழந்தைகளைப் புதைத்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு சிறுமியின் படம் காட்டப்பட்டுள்ளது. |