வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2008
Appearance
- ஆகஸ்ட் 30:
- கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)
- துணுக்காய் ஆலங்குளத்தில் படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் 20 படையினர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். (புதினம்)
- இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள புறக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் 46 பேர் காயமடைந்தனர். (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)
- ஆகஸ்ட் 28: வவுனியா, பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகளில் ஏழு படையினர் கொல்லப்பட்டு 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். பாலமோட்டை நகரைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)
- ஆகஸ்ட் 27: கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. (தினக்குரல்)
- ஆகஸ்ட் 26: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியதில் இலங்கைக் கடற்படையினர் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். (புதினம்), (சண்டே டைம்ஸ்)
- ஆகஸ்ட் 22: முல்லைத்தீவில் துணுக்காய், உயிலங்குளம் ஆகிய பகுதிகளைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (டெய்லி மிரர்)
- ஆகஸ்ட் 21:
- மட்டக்களப்பு, வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அடுத்து ப்பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. (தமிழ்நெட்), (தமிழ்நெட்)
- வவுனியா, பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் ஐந்து படையினர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 16: வவுனியா, வடமேற்கு பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வினை விடுதலைப் புலிகள் முறியடித்ததில் 11 படையினர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 15 - மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஏழு விடுதலைப் புலிகளின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வன்னிக்கு அனுப்பப்பட்டது. (தினக்குரல்)
- ஆகஸ்ட் 12: வவுனியா, குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் இலங்கைப் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டு 18 படையினர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 11: அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 9: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 8:
- முல்லைத்தீவு மருத்துவமனையினுள் இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் மடு அன்னை உற்சவம் இம்முறை இடம்பெறாது என்று மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு யோசப்பு அறிவித்தார். (புதினம்)
- ஆகஸ்ட் 7: முல்லைத்தீவு, மணலாறு பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடல்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. (புதினம்)
- ஆகஸ்ட் 6: வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் ஜூலை 2008 இல் மாத்திரம் 106 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டு, 662 பேர் காயமடைந்தனர் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். (புதினம்)
- ஆகஸ்ட் 4: வவுனியாவில் பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 3: ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (புதினம்)
- ஆகஸ்ட் 2: அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஆகஸ்ட் 1:
- முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 25 படைகள் இறந்து அல்லது காணாமல் போயுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. (புதினம்), (புதினம்)
- தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக ஆனந்த விகடன் வார இதழ் தெரிவித்துள்ளது. (புதினம்)