வாத்திமா
ஏ. சேசைய்ய சாஸ்திரி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
சோழ நாடு, சென்னை | |
மொழி(கள்) | |
பிராமணத் தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஐயர், தமிழர் |
வாத்திமா (அல்லது வாத்திமர், மாத்தியமர்) என்றழைக்கப்படுவோர் தமிழ்நாட்டில் வாழும் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைப்பிடிக்கும் இவர்கள் ஸ்மார்த்த மரபைச் சேர்ந்த பஞ்ச திராவிடப் பிராமணர் ஆவர்.[1]
புவியியற் பரம்பல்[தொகு]
இவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் செறிந்து வாழ்வதனால், தனிப்படுத்தப்பட்டும், பிற பண்பாடுகளின் தாக்கங்களுக்கு அதிகம் உட்படாதவர்களாகவும் உள்ளனர்.[2] இதனால், ஆங்கில மொழியையும், மேனாட்டுப் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் போக்கு இவர்கள் மத்தியில் மிகவும் தாமதமாகவே ஏற்பட்டது.
தொழில்[தொகு]
பழைய காலத்தில் இவர்கள் மத்தியில் இருந்த முக்கியமான தொழில் பணம் கடன் கொடுப்பது ஆகும். வாத்திமாப் பெண்களும் தொழில் செய்வது உண்டு. இவர்கள் வேளாண்மை, பாய் பின்னுதல், கடன் கொடுத்தல் ஆகிய தொழில்களில் ஈடுபடுவர். இவர்கள் சமய இலக்கியங்களிலும் அறிவு பெற்றவர்கள்.[3]
பிரிவுகள்[தொகு]
- பதினெட்டு கிராமத்து வாத்திமா
- உடையலுர்
- நன்னிலம்
- ரதமங்கலம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vathimas in the list of Brahmin communities
- ↑ Sruti, Issues 53-64, Pg 338
- ↑ Paramacharya: life of Sri Chandrasekharendra Saraswathi of Sri Kanchi, Pg 25
வெளி இணைப்புகள்[தொகு]
- Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. pp. 337–338.