வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
Appearance
இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ் நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிச் சந்தியில் அமைந்துள்ளது வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை. பிரித்தானியர் ஆட்சியின்போது, அவர்களால் அமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆங்கில, கிறிஸ்தவப் பின்னணியிலேயே கல்வி கற்பித்து வந்தன. இதனால் சைவ சமயமும், தமிழ் மொழியும் தாழ்ச்சி அடையும் நிலைமையை உணர்ந்த ஆறுமுக நாவலர் இப் பாடசாலையை நிறுவினார்.