உள்ளடக்கத்துக்குச் செல்

ம. சு. அனந்தராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாப்பூர் சுந்தரம் அனந்தராமன் (Mylapur Sundaram Anantaraman) (26 ஆகஸ்ட் 1924-19 பிப்ரவரி 2018) ஓர் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசைக் கலைஞர் ஆவார். இவர் பரூர் பாணியில் வயலின் வாசிப்பில் நிபுணராக இருந்தார். கலைமாமணி விருது மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் காஞ்சி சங்கர மடத்தின் தலைமைக் கலைஞராக இருந்தார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

அனந்தராமன் 1924 ஆகஸ்ட் 26 அன்று, இன்றைய கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவாவின் பரவூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பரவூர் சுந்தரம் ஐயர் திருவிதாங்கூர் அரச மாளிகையில் வயலின் இசைக் கலைஞராக இருந்தார்.[2] இவரது தந்தை, 1932 இல் கேரளாவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார்.[3] அனந்தராமன் தனது ஆறு வயதிலேயே தனது தந்தை சுந்தரம் ஐயரிடமிருந்து வயலின் கற்றுக்கொண்டார். இவரது தந்தை, இவருக்கும் இவரது சகோதரர் எம். எஸ். கோபாலகிருஷ்ணனுக்கும் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை பயிற்சி அளித்தார்.[4] இவரது மூத்த சகோதரி பரவூர் சீதாலட்சுமியும் வயலின் கலைஞராக இருந்தார்.[5] இவரும் இவரது சகோதரியும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் ஆகியவற்றில் வயலின் இசைத்தனர்.[5]

அனந்தராமன் தனது சகோதரருடன் இணைந்து தனது சொந்த பாணியை வடிவமைத்தார்.[6] சகோதரர்கள் பரவூர் பாணியில் பிரபலமாக இருந்தனர்.[4] மார்கழித் திருவிழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் இவர் தவறாமல் பங்கேற்று வந்தார்.[6] பின்னர், எம். எஸ். கோபாலகிருஷ்ணன் தனது சொந்த வயலின் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியபோது, அனந்தராமன் அவருடன் இணைந்து வயலின் இசைத்து வந்தார். [6] ம. ச. சுப்புலட்சுமி மற்றும் ஓம்கார்நாத் தாக்கூர் உள்ளிட்ட இந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் அனந்தராமன் வயலின் கலைஞரானார்.[6]

1962 முதல் 1983 வரை சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வயலின் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.[1] பின்னர், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் வயலின் கற்பித்தார்.[1]

இவரது மகன்களான சுந்தரேசன் மற்றும் கிருஷ்ணசுவாமி ஆகியோரும் கருநாடக வயலின் கலைஞர்களாக இருந்தனர்.[6][3] இவரது மகள் எம். ஏ. பாகீரதியும் ஒரு கருநாடக பாடகி ஆவார்.[6][3]

இறப்பு[தொகு]

அனந்தராமன் 19 பிப்ரவரி 2018 அன்று, தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள, மயிலாப்பூரில் தனது வீட்டில் காலமானார்.[7]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "M.S. Anantharaman (1924-2018)". www.magzter.com (in ஆங்கிலம்).
  2. "മരിക്കാത്ത ഓർമ്മകൾ - ജനുവരി 3" (in மலையாளம்). 3 January 2022.
  3. 3.0 3.1 3.2 . 20 February 2018. 
  4. 4.0 4.1 . 
  5. 5.0 5.1 "M.S. Anantharaman". www.sruti.com.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "വയലിന്‍ വാദകന്‍ എം.എസ്.അനന്തരാമന്‍ അന്തരിച്ചു" (in ml). Mathrubhumi. https://www.mathrubhumi.com/print-edition/india/chennai-1.2615369. 
  7. MyTimes, Team. "Obituary: Violin vidwan Parur M. S. Anantharaman". MYLAPORE TIMES. https://www.mylaporetimes.com/2018/02/obituary-violin-vidwan-parur-m-s-anantharaman/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சு._அனந்தராமன்&oldid=4016952" இலிருந்து மீள்விக்கப்பட்டது