மூவகை மொழிகள்
Appearance
ஓர் எழுத்து, தனியாகவோ பல எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்.[1] பதம், மொழி, கிளவி என்பன ஒருபொருள் தரும் பலசொற்கள்.
மூவகை மொழிகள்
[தொகு]மொழி மூவகைப்படும். அவையாவன
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
தனிமொழி
[தொகு]ஒருசொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.
எ.கா: வா, கண், செய்தான்
தொடர்மொழி
[தொகு]இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.
எ.கா: படம் பார்த்தான்.
பொதுமொழி
[தொகு]ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி எனப்படும்.
எ.கா: அந்தமான், பலகை, வைகை
‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் (விலங்கு) என வேறு பொருளையும் தருகின்றது.
நன்னூல் நூற்பா
[தொகு]ஒருமொழி ஒருபொருள நவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன - நன்னூல், 260
சான்றுகள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு பாடநூல். p. 17.
வெளியிணைப்புகள்
[தொகு]- நன்னூல் நூற்பா எண்: 260
- விக்கிமூலம் (வெளி இணைப்பு) பவணந்தி முனிவரின் நன்னூல் சொல்லதிகாரம்