மதுரை வேளாசான்
மதுரை வேளாசான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 305.
புலவர் பெயர் விளக்கம்[தொகு]
ஆசான் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியன். வேளாசான் = வேள்வி செய்யும் ஆசான். வேள்வி = மக்களுக்குப் பயன்படும் உதவி. போர் நிற்பதற்கு உதவிய பாங்கு பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்த உதவி வேள்விதானே!
புறநானூறு நூலைத் தொகுத்தவர் பாடற்பொருளால் இவருக்குப் பெயர் சூட்டியுள்ளார்
பாடல் சொல்லும் செய்தி[தொகு]
- திணை - வாகை
- துறை - பார்ப்பன வாகை (பார்ப்பனன் ஒருவன் தன் செயலால் வெற்றி பெற்றதைக் கூறுவது)
பார்ப்பனின் கோலம்[தொகு]
வயலைக் கொடி போல வாடிய வயிற்றுப் பகுதியை உடையவன் அந்தப் பார்ப்பனன்.
அவன் பயலைப் பார்ப்பான் (பச்சைப் பார்ப்பான்)
அவன் உயவல் ஊர்தியான் (உந்தி உந்தி நடப்பதே அவன் ஊர்தி)
பார்ப்பனன் செயல்[தொகு]
இரவிலே வந்தான்.
ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடம் சென்றான்.
அந்த அரசனிடம் அவன் சொன்ன சொற்கள் சிலவே.
பார்ப்பன வாகை[தொகு]
விளைவு முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.
முற்றுகை விலக்கப்பட்ட நிகழ்வுகள்[தொகு]
மதில் மேல் சாத்தப்பட்டிருந்த ஏணி நீக்கப்பட்டது.
அகழியைக் கடக்கக் கிடத்தப்பட்டிருந்த சீப்பு விலக்கப்பட்டது
போரிடுவதற்காக யானைக்குப் பூட்டப்பட்ட மணி அவிழ்க்கப்பட்டது.