மதுரைக் காருலவியங் கூத்தனார்
Appearance

மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 325.
காருலவியம் என்பது மதுரையின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் இருந்த இடம்.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]பொருள் தேடச் செல்லவிருந்த தலைவனுக்குத் தோழி இதனைச் சொல்லித் தடுத்து நிறுத்துகிறாள்.
பெரும! கரடி புற்றைக் கிண்டிக் கறையானைத் தின்னும் வழியைக் கடந்து இவளுக்காக நீ வருகிறாய். அப்படிப்பட்ட நீ இவளைப் பிரிந்து செல்வது தகுமோ?