உள்ளடக்கத்துக்குச் செல்

மணிப்பூரி சங்கீர்த்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்பூரி சங்கீர்த்தனை

மணிப்பூரி சங்கீர்த்தனை (Manipuri Sankirtana) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கோயில்களிலும், உள்நாட்டு பகுதிகளிலும் சடங்குப் பாடல், நூதன முரசு , நடனம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சியாகும் . இணையற்ற மத பக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளின் மூலம், கிருஷ்ணரின் பல கதைகளை கலைஞர்கள் அடிக்கடி விவரிக்கிறார்கள். [1] இது, ராதிலா என அழைக்கப்படும் இராதா-கிருஷ்ணனின் காதல் நடன நாடகத்தின் நேர்த்தியான நிகழ்ச்சிகளுக்காகவும் அறியப்படுகிறது. இது முதன்மையாக மணிப்பூரில் உள்ள வைணவ சமூகத்தினாலும், அண்டை மாநிலங்களான திரிபுரா மற்றும் அசாமில் குடியேறிய வைணவ மணிப்பூரி மக்களாலும் நடைமுறையில் உள்ளது. திசம்பர் 2013 இல் நடைபெற்ற அசர்பைஜானின் பக்கூவில் நடந்த யுனெஸ்கோ குழுவின் கூட்டத்தின் எட்டாவது அமர்வின் போது "சங்கீர்த்தனை: சடங்கு பாடல், முரசு மற்றும் மணிப்பூரின் நடனம்" என்பது யுனெஸ்கோ அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் மனிதகுலத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. [2]

செயல்திறன்[தொகு]

மணிப்பூரி சங்கீர்த்தனை

சங்கீத நாடக அகாதமி தயாரித்த மனிதநேயத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் உள்ள கல்வெட்டுக்கான நியமனக் கோப்பு இந்த நிகழ்த்துக் கலையை இவ்வாறு விவரிக்கிறது: "மணிப்பூர் கோயில்களில் பாடுவதும் நடனம் ஆடுவதும் சம்பந்தப்பட்ட சடங்கு அனுசரிப்புகளில் தொடங்கி, மணிப்பூர் சமவெளிகளில் வசிக்கும் வைணவ மக்களின் வாழ்க்கையில் மத இறக்குமதி மற்றும் கட்டங்களை குறிக்கும் விதமாக வீடு மற்றும் தெருவில் நிகழ்த்தப்படும் கலைகளின் வரிசையை சங்கீர்த்தனை உள்ளடக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணரின் இறையியலும், கதையும் முக்கியமானது. ஆனால் மணிப்பூரின் வைணவத்திற்கு முந்தைய காலங்களில் இசை மற்றும் நடனம் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முறையான அம்சங்களை அவை ஒருங்கிணைக்கின்றன.

சங்கீர்த்தனை நடைமுறையின் முக்கிய அம்சம் கோவிலில் காணப்படுகிறது. அங்கு அது பாடல் மூலமும் நடனத்தின் மூலமும் இறைவனின் வாழ்க்கையையும் செயல்களையும் விவரிக்கிறது. இவை பொதுவாக வட்டமாக, பக்தர்களுக்கு முன் கோயிலுடன் இணைக்கப்பட்ட ஒரு மண்டபத்தில் நிகழ்த்தப்படுகின்றன. மணிப்பூர் பள்ளத்தாக்கு முழுவதும் நிகழ்த்தப்படும் நாட பாலாவை இது முக்கியமாக கொண்டுள்ளது. அரிபா பாலா மற்றும் மனோகர் சாய் பாலா ஆகியவை இன்று குறைவாகவே நிகழ்த்தப் படுகின்றன. அவையும் கோவிலையே மையமாகக் கொண்டுள்ளது. கோயிலுக்கு வெளியே, வசந்த காலத்தில் வண்ணங்களின் பண்டிகையை கொண்டாடும் ஹோலி பாலா அல்லது குளிர்கால மாதங்களில் நிகழ்த்தப்படும் ஷயான் போன்ற வடிவங்களை சங்கீர்த்தனை கொண்டுள்ளது. மழைகாலத்தின் போது கோயிலுக்குள் குபக் இசை எனக் கொண்டாடப்படுகிறது, இது இறைவனின் தேர் ஊர்வலத்தைக் குறிக்கிறது. வீடு கட்டுவது, காது குத்தும் சடங்கு (சிறுவயதில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும்), புனித நூல் (இளம் பருவ ஆண்களுக்கு), திருமணம், போன்ற அனைத்து வாழ்க்கை சுழற்சி விழாக்களிலும் சங்கீர்த்தனை பிரார்த்தனையாக நிகழ்த்தப்படுகிறது. மேலும், மரணத்தின் போது நடத்தப்படும் இறுதிச் சடங்குகளின்போதும் இது நிகழ்த்தப்படுகிறது. இவ்வாறு மணிப்பூரி வைணவரின் வாழ்க்கையில் பரயிருக்கும் சங்கீர்த்தனை கடவுள் புலப்படும் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது." [3]

நாட சங்கீர்த்தனை[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மணிப்பூர் மன்னர் பாக்யச்சந்திர சிங் அவர்களால் உருவான ஒரு கலை வடிவமான மணிப்பூரி நாட-சங்கீர்த்தனை, யுனெஸ்கோவின் மனித கலாச்சாரத்தின் பாரம்பரிய கலாச்சார பாரம்பரியத்தில் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff Reporter (8 December 2013). "Manipuri Sankirtana inscribed on UNESCO’s ‘intangible heritage’ list". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/manipuri-sankirtana-inscribed-on-unescos-intangible-heritage-list/article5435312.ece. பார்த்த நாள்: 2 December 2016. 
  2. "Sankirtana, ritual singing, drumming and dancing of Manipur". www.unesco.org. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016.
  3. Sangeet Nataka Akademi. "Nomination File No. 00843". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

  • A video on Sankirtana, ritual singing, drumming and dancing of Manipur, prepared by Sangeet Natak Akademi, India, and published by UNESCO (duration 9 minutes 57 seconds): Sankirtana
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்பூரி_சங்கீர்த்தனை&oldid=3315216" இலிருந்து மீள்விக்கப்பட்டது