பேச்சு:திரிகடுகம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 27, 2013 அன்று வெளியானது. |
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
[தொகு]தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.chennainetwork.com/tamil/thirikadugam.html
- In திரிகடுகம் on 2007-05-06 10:53:59, 404 Not Found
- In திரிகடுகம் on 2007-05-14 01:35:01, 404 Not Found
--TrengarasuBOT 01:38, 14 மே 2007 (UTC)
இன்னொரு கட்டுரையில் இருந்து
[தொகு]பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும் ,தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும்,மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல்உதவி செய்தலும்சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை கீழ்க்காணும் பாடல் வழி உணரலாம். பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக் காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. பாடல்—6
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால் ,உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி,
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு . பாடல்-56
இப்ப பாடலின் வழியாக ,இளமையில் கல்வி கற்று பெற்றோர்களைப் போற்றி வழிபட்டுப் போற்றிச் சான்றோர் செல்லும் நெறியில் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம் என்பது அறியலாகிறது. மனையறம்:
தமிழனின் அறச்செயல்களில் தலையாய இடம் வகிப்பது விருந்தோம்பல். இருக்கும் பிடி சோறு எனினும் அதனையும் பகுத்துண்ணும் பண்புடையவன் அவன்,மேலும்,அவனின் இல்லாளின் கடமையாக மனையறம் போற்றல்,மக்கட் பெறுதல், இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் எனப்படுவாள் என்னும் இல்லற ஒழுகலாற்றைச் கருத்தைச் சொல்ல வரும் திரிகடுகம், நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும் இல் புறஞ் செய்தலின் ஈன்றதாய்—தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக் கிழத்தி இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன் .பாடல்-64
அறம் செய்து பொருளீட்டி ,அப் பொருளைக்கொண்டு இன்பம் பெற்று, கல்வியும் நூலும் கடைபோகக் கற்று, அருள் விளங்குமாறு பேசும் பண்பையும் ஒருவர் பெற கொள்ளவேண்டும் என்ற கருத்திலமைந்த ஓர் பாடல்.
ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை –யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லை இம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. பாடல் 90
திரிகடுகம் மா.உலகநாதன் ., திருநீலக்குடி
பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று திரிகடுகம்.இதனை இயற்றியவர் நல்லாதனார்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துகளின் சேர்க்கையால் கிடைக்கும் சூரணம் எவ்வாறு உடற்பிணியைப் போக்குகிறதோ அவ்வாறே,இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி ,வாழ்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப் பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம் மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைநநிலைய வாங் கீழ்க் கணக்கு.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந நூல்.
அருந்ததி கற்பினர் தோளும் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் –சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து. பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும் ,தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும்,மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல்உதவி செய்தலும்சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை கீழ்க்காணும் பாடல் வழி உணரலாம். பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக் காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. பாடல்—6
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால் ,உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி,
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு . பாடல்-56
இப்ப பாடலின் வழியாக ,இளமையில் கல்வி கற்று பெற்றோர்களைப் போற்றி வழிபட்டுப் போற்றிச் சான்றோர் செல்லும் நெறியில் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம் என்பது அறியலாகிறது. மனையறம்:
தமிழனின் அறச்செயல்களில் தலையாய இடம் வகிப்பது விருந்தோம்பல். இருக்கும் பிடி சோறு எனினும் அதனையும் பகுத்துண்ணும் பண்புடையவன் அவன்,மேலும்,அவனின் இல்லாளின் கடமையாக மனையறம் போற்றல்,மக்கட் பெறுதல், இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் எனப்படுவாள் என்னும் இல்லற ஒழுகலாற்றைச் கருத்தைச் சொல்ல வரும் திரிகடுகம், நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும் இல் புறஞ் செய்தலின் ஈன்றதாய்—தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக் கிழத்தி இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன் .பாடல்-64
அறம் செய்து பொருளீட்டி ,அப் பொருளைக்கொண்டு இன்பம் பெற்று, கல்வியும் நூலும் கடைபோகக் கற்று, அருள் விளங்குமாறு பேசும் பண்பையும் ஒருவர் பெற கொள்ளவேண்டும் என்ற கருத்திலமைந்த ஓர் பாடல்.
ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை –யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லை இம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. பாடல் 90