புள் (பழக்கம்)
Appearance
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளையும் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இரண்டுமே கற்பனை செய்யப்படும் மனத்தோற்றம் அல்லது மனமாயை.
புள்[தொகு]
புள் என்பது கேட்கும் ஒலிகளைக் கொண்டு முடிவு செய்வது. பல்லிபடும் ஒலியையும், மயில் அகவும் ஒலியையும் 'புள்' சகுனமாக எடுத்துக் கொண்டனர். (காப்பியஞ் சேந்தனார் - நற்றிணை 246)