பி. எல். சிங்காரம்
Appearance
பி. எல். சிங்காரம் (பிறப்பு: சனவரி 9 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தமிழ் நேசன் பினாங்கு அலுவலக நிர்வாகியாகப் பணியாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சமயக் கட்டுரைகள், பக்திக் கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
சமய ஈடுபாடு
[தொகு]கோவில்களிலும், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். சமய வகுப்புகளையும் பஜனை வகுப்புக்களையும் நடத்தி வருகிறார். பினாங்கு இந்து சபா, இராமகிருஷ்ணா சிரமம், தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ஆகியவற்றில் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றிவருகின்றார். பல கும்பாபிஷேக மலர்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நூல்கள்
[தொகு]- "ஞானப்பழம் நீ பாமாலை" (1990)
- "தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு" (1995)
- "பினாங்குத் தென்றல்" (கட்டுரைகள் - 2001).
பரிசில்களும், விருதுகளும்
[தொகு]- "பண்பாடு" விருது - குன்றக்குடி அடிகளார் வழங்கியது. (1982)
- PJK விருது - அரசாங்க விருது (1998).
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பி. எல். சிங்காரம் பக்கம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்