பழமொழி நானூறு பழைய உரை
Appearance
பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]
பழமொழி நானூறு நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]
இந்த உரை தெளிவும் திருத்தமும் கொண்ட பொழிப்புரையாக உள்ளது.
- திருக்குறள், தொல்காப்பிய மேற்கோள்கள் சில கொண்டது
- பாடல் உணர்த்தும் கருத்து தனியே விளக்கப்பட்ட பகுதிகளும் உண்டு
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005