பல்லடம் மாணிக்கம்
பல்லடம் மாணிக்கம் | |
---|---|
பிறப்பு | 23 நவம்பர் 1936 பல்லடம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு |
இருப்பிடம் | விருத்தாசலம் |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (புலவர்) |
பணி | தமிழாசிரியர் |
அறியப்படுவது | தமிழ்நூல் காப்பகம் நிறுவனர் |
பெற்றோர் | சாமியப்பா, வள்ளியம்மா |
வாழ்க்கைத் துணை | திலகவதி |
பிள்ளைகள் | 2 |
பல்லடம் மாணிக்கம் (Palladam Manickam, பிறப்பு: 23 நவம்பர் 1936) தமிழறிஞரும், புலவரும், இதழாசிரியரும் ஆவார். இவர் தமிழ்நூல் காப்பகத்தை நிறுவி பல்லாயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து வருகிறார்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கோயம்புத்தூரை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் கல்விப் பின்னணி ஏதுமில்லாத சாதாரண விவசாயக் குடும்பத்தில்[3] சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோருக்கு 1936 நவம்பர் 23 இல் பிறந்தவர் பல்லடம் மாணிக்கம். பிறந்த ஊரிலேயே தொடக்கக் கல்வியை முடித்து, பின்னர் பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றார்.[1] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்து 1962 இல் புலவர் பட்டம் பெற்றார். ஆயிரம் பூ என்ற இவரது கவிதைத் தொகுதி பாரதிதாசன், கா. அப்பாத்துரை ஆகியோரின் வாழ்த்துப் பெற்றது. படிக்கும் காலத்திலேயே நல்ல தமிழ் நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகிக் கொண்டார்.[1]
சென்னையில் தமிழாசிரியராக 1962 முதல் 1975 வரை பணியாற்றினார். 1972-இல் விருத்தாசலத்தில் திலகவதி என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.[1]
திரைப்படப் பாடலாசிரியர்
[தொகு]1968 இல் வெளிவந்த தேவி திரைப்படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் எழுதிப் புகழ்பெற்றவர். வி. தட்சணாமூர்த்தியின் இசையில் இப்பாடல்கள் அனைத்தும் பெரிதும் புகழ் பெற்றன. இவர் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் பாடல்கள் எழுதவில்லை.[1] பல மெல்லிசைப் பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நூல் காப்பகம்
[தொகு]தமிழாசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விருத்தாசலத்தில் செங்கல் சூளை, வேளாண்மை ஆகிய தொழில்களில் ஈடுபட்டார். தாம் படித்த நூல்களைப் பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என்ற நல்நோக்கத்தில் பல நூல்களை வாங்கிச் சேகரித்து அவற்றைப் பராமரிக்க தமிழ்நூல் காப்பகத்தை விருத்தாசலத்தில் நிறுவினார்.[1][2] 'நிறங்கள் எனும் கலை' என்ற சமூக அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார்.[2] [4]வள்ளுவம் என்ற இதழை வண்ண அச்சில் வெளியிட்டு வந்தார்.[1][2] ரோஜா முத்தையா நூலகத்திற்கும் ஆலோகராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "தமிழ் நூல் காப்பக தந்தை பல்லடம் மாணிக்கம்". முனைவர் மு. இளங்கோவன். 7 ஏப்பிரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2024.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "A Man with a Tamil literary mission". கே. ஆர். ஏ. நரசய்யா (Madras Musings). 1-15 அக்டோபர் 2007. https://madrasmusings.com/older-archives/Vol%2017/Vol%20XVII%20-%20No%2012.pdf. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2024.
- ↑ "நான் என்ன படிக்கிறேன்? - பல்லடம் மாணிக்கம்". தமிழ் இந்து. 16 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2024.
- ↑ "Tamil Nool Kaapagam, Virudhachalam". பொதுநூலக இயக்கம். https://tamilnadupubliclibraries.org/tamil-nool-kaapagam-virudhachalam/. பார்த்த நாள்: 5 October 2024.