பயனர்:Ushanandhiniashokkumar/மணல்தொட்டி
சிவன் கோயில் | |
---|---|
உமர்கோட் சிவன் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | பாகிஸ்தான் |
மாநிலம்: | சிந்து. |
மாவட்டம்: | உமர்கோட் |
ஆள்கூறுகள்: | 25°24′58.7″N 69°46′34.5″E / 25.416306°N 69.776250°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து கோயில் |
இணையதளம்: | http://www.pakistanhinducouncil.org/ |
உமர்கோட் சிவன் கோயில்(Umarkot Shiv Mandir) என்பது பாகிஸ்தானில் சிந்து என்னும் மாவட்டத்தில் உள்ள ராணா ஜாகீர் கோத் என்னும் இடத்திற்கு அருகில் உமர்கோட்டில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும்.[1] இந்தக் கோயில் உமர்கோட்டில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில். இந்த கோயிலானது சிந்துவில் மிகவும் புனிதமான இந்து வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
முக்கியத்துவம்[தொகு]
இந்தக் கோயிலானது கீழ் சிந்து மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மக்களிடையே புனிதமான கோயிலாகக் கருதப்படுகிறது. யாத்ரீகர்கள் பலருக்கு இக்கோயிலானது தங்குமிடமாக அமைகிறது.
தெய்வம்[தொகு]
இந்தக் கோயிலில் அற்புதமான சிவலிங்கம் உள்ளது, இது உண்மையில் உலகிலேயே மிகச் சிறந்த ஒன்றாகும். புராணக்கதை கூறுகிறது, உள்ளூர்வாசிகள் லிங்கத்தின் உயரத்தைக் குறிக்கும் வரை லிங்கமானது தன்னை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
திருவிழா[தொகு]
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின் போது, மூன்று நாள் திருவிழா நடைபெறுகிறது. மகா சிவராத்திரியின் போது, கீழ் மற்றும் மேல் சிந்துவிலிருந்து பல யாத்ரீகர்கள் வருகிறார்கள், அவர்களில் பெரும்பாலானோர் மூன்று நாட்கள் கொண்டாட்டங்களுக்காகவே தங்கியிருக்கிறார்கள். இது நாட்டின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகும். இதில் சுமார் 250,000 பேர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்காக செலவாகும் அனைத்து செலவுகளையும் உமார்கோட்டின் அனைத்து இந்து பஞ்சாயத்துகளுமே ஏற்கின்றன. [3]
வரலாறு[தொகு]
புராணக்கதைகளின்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் இங்கு மாடுகளை வளர்க்கப் பழகினான், அங்கு வளர்ந்த புற்களில் பரந்த திட்டுகள் இருந்தன. ஆனால் கடைசியில் அவன் தன் மாடுகளில் இருந்து ஒன்று வேறு எங்கோ சென்று அவளுக்கு அருகில் இருந்து லிங்கத்திற்குப் பால் கொடுப்பதைக் கவனித்தான். அந்த நபர் தனது மாடு மீது ஒரு கண் வைத்து அவளது விசித்திரமான நடத்தை குறித்து விசாரித்தார். இதனையடுத்து, மக்கள் இப்பகுதிக்கு வருகை தந்தனர், சோதனை செய்த பின்னர் அது ஒரு சிவலிங்கம் என்று முடிவு செய்தனர். இவ்வாறாக சிவன் கோயில் கட்டப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tharparkar famine: Feeding the soul". Tribune. 30 March 2014. http://tribune.com.pk/story/687540/tharparkar-famine-feeding-the-soul/. பார்த்த நாள்: 20 October 2014.
- ↑ https://www.dawn.com/news/1392074
- ↑ https://www.dawn.com/news/1392074