பயனர்:Tnse savithiri cbe/மணல்தொட்டி1
Appearance
நாக்டெர்னல் லெகோப்தாலமசு
[தொகு]நாக்டெர்னல் லெகோப்தாலமசு என்பது மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களைத் திறந்து கொண்டே தூங்கும் ஒரு பிரச்சினை ஆகும். குழந்தைகள் பலருக்கு இது சாதாரணமாக இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்பது சிறிது சிக்கலான பிரச்சினை தான். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் மூடாமல் கொஞ்சம் திறந்தபடி தூங்குவது(அரைக்கண்) இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடியபடியே தூங்குவர். பறவைகள், விலங்குகள் ஒரு கண்ணை மூடியபடி தூங்குகின்றன. அப்போது அவைகளுக்கு ஒரு பக்க மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ள இயற்கை வழங்கிய கொடை. இமைகளே இல்லாத விலங்குகள் அதிகம் உண்டு. மீன்களுக்கு இமைகளே இல்லை. டால்பின்கள் ஒரு கண்ணை மூடியே தூங்கும்.