பஞ்ச மூர்த்திகள்
Appearance
பஞ்ச மூர்த்திகள் என்பது சைவ சமயத்தில் ஐந்து மூர்த்திகளைக் குறிப்பதாகும். சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாகும்.
பஞ்ச மூர்த்திகள் உலா[தொகு]
இப்பஞ்ச மூர்த்திகளின் உற்சவர்களை கோவிலைச் சுற்றியோ, அருகிலுள்ள தெருக்களைச் சுற்றியோ வலம் வரச் செய்வது பஞ்ச மூர்த்திகள் உலாவாகும். இதற்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு என்று அழைக்கப்படுகிறது. இவ்விழாவின் போது உற்சவர்கள் தங்களுக்குரிய வாகனங்களில் வலம் வருகிறார்கள்.