ந. கருணாநிதி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ந. கருணாநிதி (பிறப்பு: மார்ச் 28, 1939) தமிழகக் கவிஞர். தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்தவர். பெற்றோர் இர.நடேசன், சிவகாமியம்மாள் ஆவார்.
அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். சென்னை வானொலி நிலையத்தாரால் ஒலிபரப்பப்படும் மெல்லிசைப்பாடல்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.