தமிழ்நாடு பொது இடங்களில் நுழைவு (உடை மீதான தடை நீக்கம்) 2014 சட்டம்
Appearance
தமிழ்நாடு பொது இடங்களில் நுழைவு (உடை மீதான தடை நீக்கம்) 2014 சட்டம் மனமகிழ் மன்றம், உணவகங்கள், திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அவைக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள், அரசால் அறிவிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வேட்டி அணிந்து வருபவர்களுக்குத் தடை விதித்தால், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.[1]
சட்டப்பேரவையில் பேரவை விதி 110ன் கீழ் இது நிறைவேற்றப்பட்டது.