தமிழர் நாடு (இதழ்)
Appearance
தமிழர் நாடு 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார். இது தமிழ் எண்களை பக்கங்களில் வெளியிட்டு, தமிழ் உணர்வாளர்களுடைய படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.