ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம்
Appearance
ஜும்ஆ பள்ளிவாசல்,எமக்கலாபுரம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எமக்கலாபுரம், திண்டுக்கல் மாவட்டம் |
புவியியல் ஆள்கூறுகள் | , தமிழ்நாடு, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 10°21′24″N 77°57′56″E / 10.356709°N 77.965461°E |
சமயம் | இசுலாம் |
ஜாமியா பள்ளிவாசல், எமக்கலாபுரம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எமக்கலாபுரம் எனும் ஊரில் உள்ளது. இப்பள்ளிவாசல் 250 ஆண்டுகள் பழமையானது.[1][2]
மதநல்லிணக்கம்[தொகு]
இப்பள்ளிவாசலில் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.இது அப்பகுதியில் சிறந்த மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[1]
விரதம்[தொகு]
முகரம் பண்டிகையை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் எமக்கலாபுரத்தை சுற்றி உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ பொதுமக்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருப்பது வழக்கம். [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மசூதியில் பெண்கள் தலையில் தீ கங்குகளை கொட்டியும், ஆண்கள் பூக்குழி இறங்கியும் நூதன நேர்த்திக்கடன்". jayanewslive. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2014.
- ↑ 2.0 2.1 "மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பள்ளிவாசல் "பூக்குழி" திருவிழா- சாதி மத பேதமில்லாமல் குவிந்த பக்தர்கள்!". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2014.