சொல்லிசை அளபெடை
Appearance
அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். சொல்லிசை அளபெடை வினையெச்ச வாய்பாட்டை இசையாக்கி ஒலித்துக் காட்டும்.
ஏடுத்துக்காட்டு
- இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
- செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். [1]
அளவு என்பது அளவுதலைக் குறிக்கும் வினைச்சொல். 'அளவி' என்பது இதன் வினையெச்சம். 'அளவி' என எழுதியிருந்தாலும் செய்யுள் தளை தட்டாது. பொருளும் மாறுபடாது. அப்படி இருக்கும்போது 'அளைஇ' என இங்கு இசைச்சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைப்பது சொல்லிசை அளபெடை.
அடிக்குறி[தொகு]
- ↑ திருக்குறள் 91