சென்னை தமிழிசை மாநாடு (1943)
Appearance
1943 சென்னை தமிழிசை மாநாடு என்பது சென்னையில் தமிழிசைக்கென பெரிதாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாடு ஆகும்.
பின்புலம்
[தொகு]தமிழ்நாட்டில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் நெடுங்காலமாக தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் மியூசிக் அகாதெமியால் ஒழுங்குசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன, இழிவுபடுத்தப்பட்டன.[1] 1940 களில் வலுப்பெற்ற தமிழிசை இயக்கத்துக்கு எதிராக சென்னை மியூசிக் அகாதெமி கடும் எதிர்ப்புக் காட்டியது. இந்தச் சூழலில்தான் 1943 சென்னை தமிழிசை மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கல்கி. (2006, 3 பதி). சங்கீத விழாக்கள். சென்னை: சாரதா பதிப்பகம்.