உள்ளடக்கத்துக்குச் செல்

செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவரோவியங்கள்

செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில் (Senji Singavaram Ranganatha Temple) என்பது செஞ்சி சிங்கவரம் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் குகைக்கோவில் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரங்கநாத தேவனுக்கும் அரங்கநாயகி தாயார் தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இந்தக் கோவில் பல்லவக் காலக் கட்டட கலையமைப்பில் அமைந்துள்ளது. செஞ்சி நாயக்க வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணபா நாயக்கர் என்பவரால் இக்கோவில் புனரமைக்கப்பட்டது.

விளக்கம்[தொகு]

சிங்கவரம் அரங்கநாதர் கோவில் செஞ்சிக் கோட்டையிலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இராணியின் கோட்டை இந்தக் கோயிலுடன் சுரங்கங்களால் இணைக்கப்பட்டுள்ளது.[1] உயிருள்ள பாறையிலிருந்து செதுக்கப்பட்ட 24 அடி நீளமுள்ள அரங்கநாதர் சிலை, அனந்தப் பாம்பின் சுருள்களில் சாய்ந்த நிலையில் காணப்படும்.[2] பின்புறச் சுவரில் உள்ள கந்தர்வர்கள் மற்றும் பிரம்மா முதலானோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரம்மா விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிறந்தார். கருடன் தவிர, விஷ்ணுவால் கொல்லப்பட்ட மது மற்றும் கைதபா ஆகிய பேய்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பூமாதேவி இறைவனின் பாதங்களை அலங்கரிக்கிறார். பிரகலாதர் இறைவனின் முழங்கால் அருகே அமர்ந்திருக்கிறார்.

மகேந்திரவர்மன் அல்லது நரிசிம்மவர்மன் (கி.பி. 580-688) காலத்தைச் சேர்ந்த பாறைகளிலிருந்து வெட்டப்பட்ட பல்லவக் குகைக் கோவில்கள் மேலச்சேரியில் மத்திலேசுவரர் கோவிலாகவும், சிங்கவரத்தில் அரங்கநாதர் கோவிலாகவும் உள்ளன. மண்டகப்படி கல்வெட்டின் படி, பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் அரங்கநாதர் கோயிலினை நிறுவினார். வரலாற்றாசிரியர் கே. ஆர். சீனிவாசன் இந்தக் கோவிலின் துர்கா மற்றும் விஷ்ணு மகாபலிபுரத்தின் குகைத் தலங்களைப் போலவே இருப்பதாகக் கூறுகிறார். மேலும் "சிங்கவரம்" என்ற பெயர் பல்லவ மன்னரான மாமல்லனிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். இவர் நரசிம்மர் அல்லது சிம்மவிஷ்ணு ஆவார். இந்தக் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் பல்லவ உருவத்தைப் பின்பற்றுவதாகவும் கே. ஆர். சீனிவாசன் குறிப்பிடுகிறார். துர்கா நான்கு கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் இரண்டு கைகளைத் தனது தொடையிலும் இடுப்பிலும் வைத்துக்கொண்டு மகிசாசூரன் தலையில் நிற்கிறார்.[3]

புராணக்கதை[தொகு]

கோவிலின் தலபுராணம் இதை அரக்க மன்னன் இரணியகசிபு பிறந்த பிரகலாதாவின் புராணத்துடன் தொடர்புப்படுத்துகிறது.

சிங்கவரம் கோவிலில் உள்ள கோப்பெருஞ்சிங்கா (காடவத் தலைவர்) கல்வெட்டு, தெய்வம் திருப்பன்றிக்குன்று பேரரசர் என்று குறிப்பிடுகிறது. இது வராக பெருமாள் ஆலயம் என்று பொருள்படும்.[4]

பிற்காலப் புராணங்களில், செஞ்சி கிருஷ்ணப்பா நாயக்கர் வரதராஜ பெருமாள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மலர்த் தோட்டத்தை வைத்திருந்தனர். ஆனால் பெருமாள் ஒரு பன்றி வடிவில் தோட்டத்தை அழித்தார். கிருஷ்ணப்பா நாயக்கர் அந்த விலங்கைத் துரத்துகிறார், ஆனால் அதைக் கொல்ல முடியவில்லை. பன்றி வேடத்தில் இருந்த பெருமாள் சிங்கவரத்திற்குச் சென்று, தன்னை ஒரு குகைக்குள் ஆழ்த்தி, பின்னர் தான் யாரென்று நாயக்கரிடம் வெளிப்படுத்துகிறார். திகைத்துப்போன நாயக்கர் சிங்கவரம் கடவுளிடம் ஆசீர்வதிக்க வேண்டுகிறார். பின்னர் இறைவன் ஒரு துறவியின் வழியாகக் கோயிலைக் கட்டும்படி நாயக்கரை அறிவுறுத்துகிறார். ஒரு கட்டத்தில் துறவி நாயக்கரைக் கொல்ல முயல்கிறார். ஆனால் நாயக்கர் துறவியைக் கொன்றுவிடுகிறார். ஆனால் இறந்த துறவியின் உடல் தங்கமாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி செஞ்சிக் கோட்டைக்குள் அரங்கநாதர் கோயில் கட்டப்பட்டது. மேலும் சிங்கவரம் கோயில் கட்டப்பட்டது (மறுசீரமைக்கப்பட்டது).[5]

இந்தக் கோவிலில் நடைபெறும் சஷ்டி பூர்த்திக் கொண்டாட்டம் தேசிங்கு ராஜா புராணத்துடன் தொடர்புடையது. இந்தக் கோவில் தேசிங்கு ராஜாவின் குலத் தெய்வமாக உள்ளது.[6][2] புராணக் கதைகளின்படி, கிபி 1714-இல் ஆற்காடு நவாப் சதத்துல்லா கானுக்கு எதிரான போருக்கு முன்பு ராஜா தேசிங்கு தந்து குலதெய்வ ஆசிக்காக இங்கு வந்தார். ஆனால் குலத் தெய்வத்திற்கு இப்போருக்கு தேசிங்கு செல்வதில் விருப்பம் இல்லாததால் மறுப்பைக் குறிக்கும் வகையில் தலையைச் சற்று திருப்பி வைத்துக்கொண்டது. இருப்பினும், ராஜா தேசிங்கு அவசரமாகத் தனது போர்த் திட்டங்களுடன் முன்னேறினார். ஆனால் போரில் கொல்லப்பட்டார். ராஜா தேசிங்கு தனது சொந்த முஸ்லீம் கூட்டாளியைக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சதத்துல்லா கானுக்கு இந்துக்கள் ஆலோசகர்கள் இருந்ததாக டுமோண்ட் குறிப்பிடுகிறார். புராணங்கள் மற்றும் பாடல்களில், போரைத் தொடர ராஜாவின் திட்டங்களைப் பற்றிக் கவலைப்பட்ட அரங்கநாதர், தேசிங்கின் இளம் மனைவிக்கு முன்னால் தோன்றுகிறார். பின்னர் அவர் சதி செய்ய அனுமதி கேட்கிறார். அவர் முதலில் அவளைத் தடுக்க முயல்கிறார். ஆனால் அவளுடைய வற்புறுத்தலுக்கு ஒப்புக் கொண்டு அவளையும் இறந்த கணவரையும் வரங்களுடன் ஆசீர்வதிக்கிறார்.[2][7][5]

கோவில் திறந்திருக்கும் நேரம்[தொகு]

கோவில் தினமும் காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 04.00 மணியிலிருந்து 06.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Alf Hiltebeitel, (2009). Rethinking India's Oral and Classical Epics: Draupadi among Rajputs, Muslims, and Dalits, p.366. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226340554
  2. 2.0 2.1 2.2 C.S, Srinivasachari (1943). History Of Gingee And Its Rulers.
  3. K.R., Srinivasan (1964). Cave-temples of the Pallavas, Issue 1 of Architectural survey of temples, p.43, p.112, p.118, p.268. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120601513.
  4. Venkataramaiah, K.M.,(1996). A handbook of Tamil Nadu, p.39. International School of Dravidian Linguistics
  5. 5.0 5.1 Iyer, P.V.Jagadisa (1982). South Indian Shrines: Illustrated. Asian Educational Services. pp. 182–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120601513.
  6. Note: While Rajputs have Kuldevi goddesses and worship their Satimatas as family protectors, Vaishnava avatars like Ram and Krishna are part of their pantheon.
  7. Hiltebeitel, Alf (1988). The Cult of Draupadi, Volume 1: Mythologies: From Gingee to Kuruksetra. pp. 55–102, 392–393. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226340456.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]